Monday, February 10, 2025

How to Build Your Own Robot: A Beginner's Guide to Robotics in Tamil - ரோபோக்களை நாமே தயார் செய்யலாம்

#Buildarobot #Beginnerrobotics #DIYrobotics #Arduinokits #RaspberryPi #Roboticsforbeginners #Tamilroboticsguide #Learnroboticsonline #Robotbuildingtutorial #Affordableroboticsprojects 


கடிதம் 7

ரோபோக்களை

நாமே தயார்

செய்யலாம்

LEARN TO BUILD A ROBOT


ரோபோக்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நிறைய புத்தகங்கள் வந்துள்ளன. அவை இல்லாமல் ஆன்லைன் டூடோரியல் பயிற்சிகளும் நிறைய வலம் வருகின்றன. நாம்தான் எது வேண்டும், எது வேண்டாம் என்று தீர்மானம் செய்ய வேண்டும்.

எத்தனை நாட்கள் ஆகும் ?

சிலர் கேட்கிறார்கள், ரோபாட்டிசம் அல்லது இந்த ரோபோக்களை. உருவாக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள. எவ்வளவு நாட்கள் ஆகும்? என்கிறார்கள். என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது ?

நீங்கள் எவ்வளவு வேகமாக கற்றுக் கொள்வீர்கள் ? அவ்வளவு வேகமாக. அதனை கற்றுக்கொள்ளலாம். எவ்வளவு அதிகமாக அதனைக் கற்றுக்கொள்ள முடியுமோ? அந்த அளவில் அதிகமான அளவு கற்றுக்கொள்ள முடியும். தினம் தினம் நீங்கள் எவ்வளவு நேரம் அதற்காக ஒதுக்குவீர்கள். இதையெல்லாம் பொறுத்து இந்த கால அளவு அதிகமாகும் அல்லது குறைவாகும்.

ரோபோக்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை புரிந்து கொள்ள நீங்கள் குறைந்தபட்சம் 3 - 6 மாதங்கள் ஆவது ஆகும், அதற்குள் அதனை படித்து முடிக்கலாம், அதனை தெரிந்து கொள்ளலாம், அதனைப் புரிந்து  கொள்ளலாம்.

ஆச்சர்யமான இன்னொரு செய்தியும் உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்களே ஒரு குட்டி ரோபோ ஒன்றினைத் தயாரிக்கவும் முடியும்.

 
நம்மால் முடியும்

கொஞ்சம் வளர்ந்த நிலையில், இன்னும் கொஞ்சம் படித்து, இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டு, சில திட்டங்களின் சேர்ந்து வேலை பார்க்கலாம். சில திட்டங்களை நாமாகவும் செய்ய முயற்சிக்கலாம்.

இதற்கு 6  முதல் 12 மாதங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இதனை நீங்கள் முனைப்பாக, முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக இது சாத்தியம்தான்.

இது ஒன்றும் அவ்வளவு பெரிய கம்ப சூத்திரம் இல்லை, நாமே செய்யலாம், இப்படி நினைத்தவர்கள்தான் சாதித்திருக்கிறார்கள், நம்மால் முடியும்.

விவசாயம்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோக்கள் உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற வேண்டும். ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் பிடிக்கும். அந்த சமயம் ஒரு விவசாய நிலத்தில் வேலை பார்க்க ரோபோக்களை உருவாக்க வேண்டும்.

விவசாய வேலைகளை செய்ய கிராமத்தில் ஆட்கள் இல்லை, இனி நாம் மனித இயந்திரங்களைத்தான் நம்ப வேண்டும், ஆட்கள் அதிகம் பிடிக்கும் வேலைகளைச் செய்ய மனித ரோபோக்கள் வேண்டும், விதைக்க, நாற்றுக்கள் நட, களை எடுக்க, மருந்து தெளிக்க, உரமிட, அறுவடை செய்ய, சிறியதாக விலை குறைவாக இருக்க வேண்டும்.

ஒரு தனிப்பட்ட விவசாயி வாங்கி பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும், காரணம் இந்தியாவில் 86 சதவிகித விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள்.

சுதந்திரத்திற்குப் பிறகு நமது மக்கள் தொகை மூன்று மடங்கு பெருகி உள்ளது, ஆனால் நமது விவசாய உற்பத்தி  நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, அதற்குக் காரணம் இந்த 86 சதவிகித விவசாயிகள்தான். அதனால் நாம் திட்டமிடும் மனிதரோபோக்கள் அவர்கள் பயன்படுத்தும்படியாக இருக்க வேண்டும்.

தொழில் மற்றும் சேவைத் துறை

தொழிற்சாலையில் வேலைகளைச் செய்யும் ரோபோக்களை, தொழில்களின் தன்மை, அதில் செய்யும் வேலைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்க முடியும். தொழிற்சாலை ரோபோக்கள், அதுபோல சேவைத் துறைக்கு தேவைப்படும் ரோபோக்களையும் உருவாக்கும் தேவைகள்  அபரிதமாக உள்ளது.

மூவகைக் கற்றல்

ரோபோக்குள் உருவாக்குவதற்கான அடிப்படை கல்வியை பெறுவது எப்படி என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை சுலபமாக கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக இதற்கு தேவைப்படுவது மூன்று.

ஒன்று ஆன்லைன் டூடோரியல் வகுப்பு, இரண்டாவது குறைவான கட்டணத்தில் பெறும் பயிற்சி வகுப்புகள், மூன்றாவது அதற்கான புத்தகங்கள், இவை மூன்றும் இருந்தால், நிச்சயம் ரோபோக்குள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை நாம் கற்றுக்கொண்டு கலக்கலாம்.

கட்டணமில்லா கல்வி

யூடியூப்’பில் மற்றும் சில வலைத்தளங்களில் கட்டணமில்லாமல் ரோபோட்டிக்ஸ், என்னும் மனித எந்திரங்களை உருவாக்கும் தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள், பயிற்சி தருகிறார்கள், தொடர் பயிற்சி தருகிறார்கள். அவற்றை  நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புத்தகங்கள்

ரோபோ அறிவியல் பற்றி புத்தகங்களில் மூலகங்களிலிருந்து எடுத்து படிக்கலாம். அமேசான். அமேசான் இல் இருந்து குறைந்த விலையில் மின் புத்தகங்கள் வாங்கி படிக்கலாம். உதாரணமாக. ரோபோட்டிக்ஸ். ஃபார் டம்மீஸ். ல் அண்ட் ரோபோட்டிக்ஸ் வித் ரஷ் பெரி. பி.

வழிமுறை இரண்டு.

செயல்முறையாக. ரோபோடிஸ்ம் கற்றுக் கொள்ள கீழ்க்கண்ட கருவிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

நீங்களே செய்து பாருங்கள், முறையில் தேவைப்படும் சில  சிறிய பொருட்கள், மோட்டார்கள், சக்கரங்கள், உணரிகள் மற்றும் பேட்டரிகள் உள்ளூர் கடைகளிலேயே கிடைக்கும்.

அர்டுய்னோ கிட்ஸ் (ARDUINO KITS)

இதனை அடுத்து இன்னும் ஸ்டார்ட்டர் கிட் என்று சொல்லுவார்கள். இது ஒரு சிறு. ரோபோ செய்வதற்கான. தட்டுமுட்டு சாமான்கள் அத்தனையும் இந்த பெட்டிக்குள் அடக்கம். இந்த பெட்டியின் பெயர் அர்டடுயினோகிட்ஸ் இதில் அத்தனையும் இருக்கும். இதற்கு அதிகபட்சமாக ரூ.3000 வரை செலவாகும். மூவாயிரம் ரூபாயில் ஒரு ரோபோவா ?

ரேஷ்ப் பெர்ரி (RASP BERRY)

ரேஷ்ப்பெர்ரி தொடக்க பயிற்சி செய்பவர்களுக்கு இது தேவையில்லை. இது ஒரு சிறிய மினி கம்ப்யூட்டர். மிகவும் மேம்பட்ட திட்டங்களுக்கான ரோபோக்களை உருவாக்குபவர்களுக்கு மட்டும் இது தேவைப்படும். இதற்கு 4000 - 6000 ரூபாய் வரை செலவாகும். அவ்வளவுதான்.

உள்ளூர் கடைகளில் கிடைக்கும்

நீங்களே செய்யும் போது பயன்படுத்தக் கூடிய அடிப்படையான பொருட்கள்.

சிறு சிறு மோட்டார்கள், சக்கரங்கள், உணரிகள் மற்றும் பேட்டரிகள் ஆகிய சில்லரைப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளூர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆன்லைன் கடைகளில் இவை கிடைக்கும் அல்லது அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் இல் வாங்கிக்கொள்ளலாம்.

மூன்று வழிமுறைகள்

மூன்று முதல் ஆறுமாத அவகாசத்தில் சிறியதான ஒரு ரோபோவினை செய்து முடிக்க, எப்படி திட்டமிட வேண்டும் என்று பார்க்கலாம்.

லைட் சென்சார் ரோபோ (LIGHT CENSOR ROBO)

வெளிச்சம் பார்த்தால் அதனை நோக்கி ஓடும் ரோபோ என்றால் உங்கள் ரோபோவில் வெளிச்சத்தை நோக்கி ஓடும்படியாக அமைக்க லைட் சென்சார்களை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

அல்ட்ராசோனிக் சென்சார் ரோபோ (ULTRASONIC CENSORS  ROBO)

தடைகள் வந்தால் தவிர்க்கும் ரோபோக்கள். எந்த ஒரு பொருளையும் நோக்கி ஓடும். இந்த ரோபோ தடை ஏதும் வந்தால் அதன் மீது சென்று முழுவதற்கு முன்னதாகவே திரும்பி வந்துவிடும். அதுதான் அப்ஸ்டக்கிள் அவாய்டிங்க் ரோபோ  என்று சொல்லுவார்கள். அதில் அல்ட்ராசோனிக் சென்சார்களைப் பொருத்த்வேண்டும்.

அய் ஆர் சென்சார் ரோபோ (I R CENSOR ROBO)

வெண்மையான பின்புறத்தில் இருக்கும் கருப்பு நிற கோடுகளில் ஓடும் ரோபொ இது. இதில் பயன்படுத்தும் சென்சார்களை அய் ஆர் சென்சார்கள் என்று சொல்லுவார்கள்.

ஆன்லைன் சமூகங்களின் பயிற்சிகளில் சேர்ந்து தேவையான பயிற்சிகளை, பெற்றுக் கொள்ளலாம், தகவல்களை செய்திகளையும் தெரிந்தும் கொள்ளலாம், பகிர்ந்தும் கொள்ளலாம்.

கேகிள் வலைத்தளம் (KAGGLE WEBSITE)

கேகிள் வலைத்தளம், கூகிள் அல்ல, இந்த வலைத்தளத்திற்குள் சென்றால். கோடிங் (CODING) எனும் குறியீட்டு மொழியை கற்றுக்கொள்ளலாம். அதுபோல எந்திரங்களின் கற்றல் எனும் மெஷின் லேர்னிங் (MACHINE LEARNING) என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.

கீத் ஹப் வலை தளம்(GIT HUB WEBSITE)

இந்த வலைத்தளத்திற்குள் நுழைந்தால் கோடிங் எனும் குறியீட்டு மொழியை கற்றுக்கொள்ளலாம், அல்லது டவுன்லோடு செய்து கொள்ளலாம். சில ரோபா சம்பந்தமான திட்டங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேண்டுகோள்

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள்.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உண்மையிலேயே உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

இந்த கடிதங்கள் செயற்கை  நுண்ணறிவுபற்றிய விழிப்புணர்வு அளிக்கத்தான் இதனை சொல்லித்தர அல்ல.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். பிறருக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். எதுவும் நம்மால் முடியும் என்று நம்புங்கள்.

உங்கள் பெற்றோர்களை  உங்கள் இல்லத்தில் வைத்து  நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பராமரியுங்கள், அவர்களின் தேவைகளை நிறைவு செய்யுங்கள், அனாதை இல்லத்தில் அட்மிஷன் போட்டு விட்டு அலைய விடாதீர்கள். 

 பூமி ஞானசூரியன்

Sunday, February 9, 2025

Robotism: The Rise of Human-Like Machines in the Age of AI - செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் மனித இயந்திரங்கள்

 #robotism #artificialintelligence #humanoidrobots #automation #roboticprecision #robotic versatility #AIinrobotics #roboticsensor #future of robotics #robotic labor 


கடிதம் 6

  மனித இயந்திரங்கள்

                                            ROBOTISM

A MACHINE FEEDING CHAPLIN IN MODERN TIMES CINEMA

ஒரு ரோபோ கேட்டது “ மனிதர்கள் ஏன் நமக்கு அவர்களைப்போல சிந்தித்து செயல்படும் திறமையை நமக்குக் கொடுக்க விரும்புகிறார்கள் ?”

இரண்டாவது ரோபோ சொன்னது “காரணம் அவர்கள் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு நம்மை மாதிரி ஆகிவிட்டார்கள்”

இப்போது இரண்டு ரோபோக்களும் வாய்விட்டு சிரித்தன.

ரோபோ தொழில் நுட்பம் (ROBOTISM)

ரோபோடிசம் என்பது ரோபோ தொழில்நுட்பம் தொடர்பான அறிவியல். ரோபோக்களை வடிவமைத்தல், கட்டுமானம் செய்தல், அவற்றை நாம் விரும்பும் வேலைகளைச் செய்ய  வைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் ரோபோ அறிவியல் என்பது. இதில் உள்ள 10 விதமான செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

தன்னிச்சையாக செயல்படுதல் (AUTOMATION)

மனிதர்களின் குறுக்கீடு இல்லாமல் அதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும். மறுபடியும் மறுபடியும் செய்துகொண்டே இருக்கும். நிறுத்து என்று கட்டளை இடும்வரை அது அதன் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கும். அதுதான் மனித இயந்திரம், அதுதான் “ரோபோ மனிதன்.”

1936 FILM BY CHAPLIN

மனிதன் இயந்திரமாகவே மாறிவிடுவான் (PROGRAMMABILITY)

நிறையபேர் அப்படி இருக்கிறார்கள், எதைச் செய்தாலும் இயந்திரம் மாதிரி செய்துகொண்டே இருப்பார்கள், சிரிக்கமாட்டார்கள், ஆட மாட்டார்கள் அசைய மாட்டார்கள், பேசமாட்டார்கள், இயந்திரங்களோடு வேலை செய்து பழகி விட்டால் நாமும் அப்படியே மாறிவிடுவோம். இயந்திரங்களோடு வேலை பார்க்கும் மனிதன் இயந்திரமாகவே மாறிவிடுவான் என்று சொல்லி ஒரு படம் வந்தது.

சார்லி சாப்ளின்  - CHARLIE CHAPLIN

தொழில் புரட்சி என்ற கருத்தை மையமாக  வைத்து அற்புதமான ஒரு நகைச்சுவைப் படத்தை  எடுத்தார் சார்லி சாப்ளின், அந்தப் படத்தின் பெயர் “மாடர்ன் டைம்ஸ்” என்பது,  அந்தப்படம் 1936 ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி வெளி வந்தது. அந்த காலத்திலேயே அது பல விருதுகளை வாங்கிக் குவித்தது. சாப்ளின் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்று இது.

அன்று தொழில் யுகப்புரட்சி

தொழில்புரட்சி முதன்முதல் தொடங்கி தோடர்ந்த  காலகட்டம் 1760 முதல் 1840 வரை, அது விவசாயம், பொருட்கள் உற்பத்தி, சுரங்கத் தொழில், போக்குவரத்து, பொருளாதாரம் கலாச்சாரம் என அனைத்துத் துறைகளையும் ஆட்டிப்படைத்தது. இன்று செயற்கை நுண்ணறிவும் யுகப் புரட்சிதான்.

மனிதர்களால் திட்டமிடுதல் (PROGRAMMABILITY)

CHAPLIN BETWEEN MACHINES

ரோபோக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் ? எப்படி கட்டுப்படுத்த வேண்டும் ? இதையெல்லாம் அதற்கு முன்னதாகவே சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்தக் கட்டளையை முன்னதாகவே எழுதியிருக்க வேண்டும். இதனை நாம் அதன் இயந்திர மூளையில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பதட்டமில்லாமல் அந்த வேலையை பதிவிசாக செய்து முடிக்கும்.

நுட்பமான வேலை (PRECISION)

ரோபோக்கள், துல்லியமான வேலைகளைச் செய்யும், மென்மையான  வேலைகளைச் செய்யும், அந்த வேலைகளை அது விவரமாகச் செய்யும். அதாவது செய்வதை திருத்தமாகச் செய்யும், அந்த வேலை ஏனோ தானோ என்று இருக்காது, அது அந்த வேலையைத் தனது கடமையாக கருதி செய்யுமே தவிர கடமைக்கென்று செய்யாது.

சகலகலா ரோபோக்கள் (VERSATILITY)

பல துறைகளில் ரோபோக்கள் வேலை பார்க்கும், அவற்றை இந்த துறையில் மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை, எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், பொருட்கள் உற்பத்தி செய்யலாம், சுகாதார பாதுகாப்பு செய்யலாம், விவரமான விண்வெளி ஆராய்ச்சி செய்யலாம்,  இப்படி எல்லாவற்றிலும் வேலை பார்க்கும் சகலகலா ரோபோக்களை சகட்டுமேனிக்கு உருவாக்கலாம்.

மனிதர்களின் ஜெராக்ஸ் காப்பி (COPY OF MEN)

HUMANOID ROBOT

செயற்கை நுண்ணறிவு மேம்பட்ட, அல்லது மேலான உணர்ச்சிமயமான சிறப்பான, சீரான ரோபோக்கள், அவை தானாக இயங்கும், தேவைக்கு ஏற்ப இயங்கும், சூழலுக்கு ஏற்ப இயங்கும், தானே முடிவு செய்யும், தானே தீர்மானிக்கும்,  அதிகாரம் பெற்ற அபூர்வமான மனித எந்திரங்கள்  மனிதர்களின் ஜெராக்ஸ் காப்பியாக வரப்போகின்றன என்கிறார்கள்.

உணர்ந்து சொல்லுபவை உணரிகள் (SENSORS)

உணரிகள் ரோபோக்களுக்கு அவை எங்கே இருக்கின்றன என்பதை சொல்லும். கட்டிடத்தின் உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? அங்கு வெப்பநிலை எப்படி இருக்கிறது? அங்கு யார்யார் இருக்கிறார்கள் ? என்னென்ன இருக்கின்றன ? இவை எல்லாவற்றையும் சொல்லும்.

பலவகை உணரிகள்

இவற்றை எல்லாம் ரோபோக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அதன் இடம் கேமரா இருக்கும், ஒலிவாங்கிகள் இருக்கும், வெப்பமளக்கும் கருவிகள் இருக்கும்,  இப்படி பலவகை  உணரிகள் இருக்கும்.

மணலைக் கயிறாய்த் திரிக்கும் (RISKY JOBS)

ரோபோக்களின் உறுதித்தன்மை என்பது மிகவும் முக்கியமானது. பௌதிக ரீதியாக மனிதர்களால் செய்ய முடியாத இடங்களில் கூட சென்று செய்ய வேண்டிய வேலைகளை, கடமைகளை, கட்டளைகளை சரியானபடி செய்து முடிக்கும் தன்மை உடையவை. சுருக்கமாக சொல்லுவது என்றால் வானத்தை வில்லாக வளைக்கும், மணலைக் கயிறாய்த் திரிக்கும். 

ஏழு நாட்களும் வேலை (7 X 24)

ரோபோக்கள் வேலை என்பது காலை 10:00 மணி க்கு ஆரம்பித்து மாலை 5:00 மணிக்கு முடியாது. ஒரு நாள் என்பது 24 மணி நேரமும் வேலை பார்க்கும். வாரத்தில் ஏழு நாட்களும் வேலை பார்க்கும்.

போனஸ் ஓவர்டைம்

அதற்கு இரண்டாம் சனிக்கிழமை மூன்றாவது ஞாயிறு, அமாவாசை கிருத்திகை, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், தேங்க்ஸ்கிவிங் ஃபெஸ்டிவல் எந்த விடுமுறையும் தேவைப்படாது, போனஸ் ஓவர் டைம், வேலை நிறுத்தம் எதுவும் கிடையாது.

வேலை வேலை வேலை

FUTURISTIC ROBOTS

வேலை வேலை வேலை எப்போதும் சொன்ன வேலையை தட்டாமல். செய்யும். பார்க்கும்போது வேலை பார்க்காத போது ஒருவேளை இதெல்லாம் எதையும் பார்க்காது அதுதான் ரொம்ப. அதுதான் மனித எந்திரம். அதுதான் ரோபோ.

செல்போன் பாக்காது

ரோபோக்கள் எப்படிப்பட்ட மோசமான சூழல்களிலும் வேலை பார்க்கும். ஃபேன் இல்லை, வேலை பார்க்கும். ஏசி இல்லை, வேலை பார்க்கும். வெளிச்சமில்லை, வேலை பார்க்கும். காற்று இல்லை,  வேலை பார்க்கும். நடுவுல டீக்குடிக்காது, காப்பி குடிக்காது, பீடி பிடிக்காது, சிகரட் பிடிக்காது, பாக்கு போடாது, செல்போன் பாக்காது.

ரோபோவுக்கு கவலை இல்லை

வங்க கடலில் மூழ்கி தொலைந்து போன தங்கம் எடுக்க வேண்டுமா? வலம்புரி சங்கு எடுக்க வேண்டுமா ? நமக்கு தொட்டால் கை சுட்டு விடும் ரசாயனத்தை தொடாமல் எடுத்து தொலை தூரத்தில் கொட்ட வேண்டுமா ? எதுவாக இருந்தாலும்  ரோபோவுக்கு கவலை இல்லை.

போ என்றால் போகும்

இப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் நாம் செல்ல வேண்டியது இல்லை. சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரோபோவிடம் போ என்றால் போகும் ! செய் என்றால் செய்யும் ! வா என்றால் வரும் ! அதுதான் ரோபோ.

பல தொழில் நுட்பங்களின் கலவையாக உருவாக்கலாம். சகலகலா வல்ல ரோபோ.

செயற்கை நுண்ணறிவு, எந்திரத்தின் கற்றல், வலைத்தள உபயோகம், இவற்றின் கலவையாக, மிகவும் சிக்கலான சிலந்தி வலை மாதிரியான வேலைகளையும், எளிமையாக சிக்கல் இல்லாமல் சிறப்பாக சீக்கிரமாக செய்து முடிப்பதுதான் ரோபோ என்னும் மனித எந்திரங்கள்.

ALLOW CHILDREN TO LEARN ROBOTS

வேண்டுகோள்

ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை, கல்லூரிகளில் சேர்ந்து படிக்காமல் உரிய புத்தகங்களை படித்து கற்றுக்கொள்ள முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள்.

அது கண்டிப்பாக முடியும், புத்தகங்கள் படித்து கற்றுக்கொள்ளலாம், வலைத்தளத்தில் இருக்கும் சில பகுதி நேரப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள லாம், செய்துபார்க்கும் பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டால் சிக்கலில்லாமல், கற்றுக் கொள்ளலாம், கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வாய்ப்புகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன.

ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள். 

உங்கள் பெற்றோர்களை உங்களோசெயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். அதன் பிரதிபலிப்புதான் சார்லி சாப்ளின் அவர்களின் மாடர்ன் டைம்ஸ். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். 

எதுவும் நம்மால் முடியும் என்டு உங்கள் இல்லத்தில் வைத்து  நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பராமரியுங்கள், அவர்களின் தேவைகளை நிறைவு செய்யுங்கள், அனாதை இல்லத்தில அட்மிஷன் போட்டு அலைய விடாதீர்கள். 

 பூமி ஞானசூரியன்

பேச: +91 8626195370, எழுத: gsbahavan@gmail.com

Thursday, February 6, 2025

செயற்கை நுண்ணறிவு பிதாமகன் கதை - THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE

 #Artificial intelligence #Father of artificial intelligence #John McCarthy,  #Ireland  #Massachusetts #California Institute of Technology #Princeton University #Stanford University #New Hampshire Dartmouth College #1956 First seminar on artificial intelligence #organised by John McCarthy #Marvin Minsky #Nathaniel Rochester #Craft Channel #Make the machines to think #Sharing of computer #Common sense in artificial intelligence #Logical reasoning.

 

கடிதம் 5

செயற்கை நுண்ணறிவு

பிதாமகன் கதை

THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE

CAN ROBOTS PERFORM TASKS LIKE HUMANS ?

செயற்கை நுண்ணறிவு யுகம் என்று சொல்லும் அளவிற்கு உலகில் உள்ள 213 நாடுகளையும் கலக்கி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவின் தந்தை யார் ? அவர் எந்த ஊர்க்காரர்? எந்த நாட்டுக்காரர்?  அவர் பெயர் என்ன ? அவர் என்ன படித்தார்  ? என்ன வேலை பார்த்தார் ? செயற்கை நுண்ணறிவை எப்படி கண்டுபிடித்தார் ?

எல்லாவற்றையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

அயர்லாந்து நாட்டு ஆசாமி

JOHN MCCARTH THE FATHER OF AI

செயற்கை நுண்ணறிவின் தந்தை ஜான் மெக்கார்த்தி என்பவர், அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் என்ற நகரைச் சேர்ந்தவர், 1927 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ஆம் தேதி அவர் பிறந்தார்.

ஆனால் இவருடைய பெற்றோர், ஐரிஷ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அயர்லாந்து நாட்டுக்காரர்ளைத்தான் ஐரிஷ் இன மக்கள் என்று சொல்லுவார்கள். அவர் தனது இளம் வயதில் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசித்து வந்தார்.

கணக்கில் புலி

பள்ளிப் படிப்பிலேயே ஜான் மெக்கார்த்தி சிறந்தவராக விளங்கினார், அதுவும்  கணக்கு பாடத்தில் அவர் புலி, அது அவருக்கு பிடித்தமான பாடமாக இருந்தது. கணக்குப் போடுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதுதான் அவருக்கு பின்னாளில் கணினியில் கவனம் செலுத்தவும், நுண்ணறிவு சம்பந்தமான ஆய்வினை முன்னெடுக்கவும் காரணமாக இருந்தது.

ஜான் மெக்கார்த்தி

பள்ளியில் படிக்கும் போதே, கணக்கு பாடத்தில் தனது வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடங்களை தாண்டியும் மேலும் மேலும் படித்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார். கணக்கு என்றாலே ஜான் மெக்கார்த்தி என்று சொல்லும் அளவிற்கு மேலும் மேலும் தனது கணித அறிவை வளர்த்துக் கொண்டார்.

முனைவர் படிப்பு

ஜான் மெக்கார்த் தனது 16 வது வயதில் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரியில் கணக்கு பாடத்தின்  பட்ட படிப்பில் சேர்ந்து, 1948 ஆம் ஆண்டு வெற்றிகரமாகப் படித்து முடித்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பிரின்சீட்டன் பல்கலைக் கழகத்தில் கணக்குப் பாடத்தில் முனைவர் படிப்பு படித்தார்.

பிரின்சீட்டின் பல்கலைக்கழகம்

முனைவர் படிப்பை முடித்த கையோடு பிரின்சீட்டின் பல்கலைக்கழகத்தில் கணக்கு பாட  இளநிலை ஆசிரியராக பணி செய்யத் தொடங்கினார் .

மிகவும் ஒரு குறுகிய காலம் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இவர் 1955 முதல் அதன் பிறகு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் 2000 ஆண்டு வரை கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் வேலை பார்த்தார்.

டார்ட்மவுத்  கல்லூரியில் பிளையார் சுழி

1955 ஆம் ஆண்டு முதல் 58 வரை மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் நியூ ஹேம்ப்ஷயர்’ரின் டார்ட்மவுத் என்னும் கல்லூரியில் வேலை பார்த்தார்,அந்த சமயம் 1956 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவிற்கான ஒரு கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்தார் ஜான் மெக்கார்த்.

1956 - DARTMOUTH CONFERENCE ON AI

அதனைடார்ட்மவுத் கருத்தரங்கு“ என்று சொன்னார்கள், அதுதான் செயற்கை நுண்ணறிவு பற்றி நடந்த அதிகாரப்பூர்வமான உலகின் முதல்  கருத்தரங்கு. செயற்கை நுண்ணறிவுக்கு போட்ட பிள்ளையார் சுழி.

ஜான்மெக்கார்த்தியுடன் மூன்றுபேர்

இந்த கருத்தரங்கு 1956 ம் ஆண்டு ஜூன் 18 முதல் ஆகஸ்டு 17 வரை சுமார் எட்டு வாரங்களுக்கு நடைபெற்றது. இதில் 47 பேர் கலந்து கொண்டார்கள், இதனை ஏற்பாடு செய்ததில் ஜான் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் மூன்றுபேர், அவர்கள், மார்வின் மின்ஸ்கி, நத்தானியேல் ரோச்செஸ்டர், மற்றும் கிளாட் ஷேனன்.

மாசாசூசெட்ஸ் கல்லூரி

1958 முதல் 1962 வரை நான்கு ஆண்டுகள் மாசாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரியுடன்  இணைந்து செயற்கை நுண்ணறிவு குறித்த பரிசோதனை மையம் ஒன்றினை நிறுவினார்.

இயந்திரங்கள் சிந்திக்குமா ?

மனிதர்களைப் போல இயந்திரங்களையும் சிந்திக்க வைக்க முடியும் என்பது பற்றிய ஆராய்ச்சி அவருக்கு உற்சாகம் அளித்தது. அதில் தன் கவனம் முழுவதையும் செலுத்த தொடங்கினார்.

லிஸ்ப் கணினி மொழி

ஜான் மெர்க்காத் அவர்களின் தொடர்ந்து ஆராய்ச்சியின் விளைவாக லிஸ்ப் என்னும் கணினி மொழியை அவர் உருவாக்கினார், அந்த லிஸ்ப் என்னும் கணினி மொழியை இன்று வரை செயற்கை நுண்ணறிவில் பயன்படுத்திய வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினியை பகிர்ந்து கொள்ளல்

ஒரு கம்ப்யூட்டர் ஒரு கணினியை பல பேர் பயன்படுத்தும் வகையில் டைம் ஷேரிங் ஆஃப் கம்ப்யூட்டர் என்ற முறையை முதன் முதல் அறிமுகம் செய்தவர் இவர்தான்.இதனால் பெருவாரியான நபர்கள்  கணினியை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

மனித இயந்திரங்களுக்கு மனித அறிவு

ரோபோக்கள் என்னும் மனித இயந்திரங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பொதுஅறிவுப் பண்புகள்(common sense in AI) மற்றும் சரியான காரணங்களுக்காக செயல்படுதல் (logical reasoning)ஆகிய ஆராய்ச்சிகளில் இவர் முழுமையாக ஈடுபட்டார்.

CAN COMPUTER LEARN COMMON SENSE ?

கணினியுடன் தொடர்புள்ள தனது வாழ்நாள் முழுக்க ஜான் மெக்கார்த் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிகளில் முழுமையாக ஈடுபட்டார்.

2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி, இந்தப் பூவுலகில் இருந்து விடைபெறும் வரை அவர் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது முக்கியமான செய்தி. அயர்லாந்து நாட்டினரான  ஜான் மேக்கார்த்தி செயற்கை எப்படி நுண்ணறிவின் தந்தை ஆனார், என்று பார்த்தோம்.

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். 

எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள். 

உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள். 

 பூமி ஞானசூரியன்

Wednesday, February 5, 2025

GOOGLE THE DIGITAL GURU - மாதா பிதா கூகிள் தெய்வம்

 

கடிதம்: 4

மாதா பிதா கூகிள் தெய்வம்

GOOGLE  THE DIGITAL GURU

செயற்கை நூண்ணறிவு புத்தம் புதியது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் ஏற்கனவே எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் தெரியுமா ? இதைப் படித்தால் உங்களுக்கு ஆச்சரிரமாக இருக்கும்.

“தம்பிகளா இதுவரைக்கும் இயற்கையான அறிவை பயன்படுத்தினீங்க. இனிமே அது இல்லன்னு கவலைப் பட வேணாம்,, அதுக்காகத்தான் நான் “செயற்கை  நுண்ணறிவு கண்டுபிடிச்சு இருக்கேன் “அப்படின்னு  என்று  70 ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொன்னார் ஜான் மெக்கார்த் என்னும் அயர்லாந்து நாட்டுக்காரர்.

அதனால் செயற்கை நுண்ணறிவு என்பது புதிதல்ல. அதுக்கும் வயசாச்சி.

முதலிடத்தில் இருக்கும் நாடு

செயற்கை நுண்ணறிவு பற்றிய செய்தி உங்களை ஆச்சரிப்படுத்தும், அதிசயப்படுத்தும், வியப்படையச்செய்யும் காரணம் உலகிலேயே மிக அதிகமான அளவில் வியாபாரத்தில் மட்டும்  30 சதம் பயன்படுத்தும்  நாடு இந்தியாதான்.

ஆராய்ச்சி செய்யும் நாடு

செயற்கை நுண்ணறிவு சார்புடைய தொழில்களில் அதிக பணம் போட்டிருக்கும் நாடு, அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு குறித்து “என்ன ? எங்கு ? எப்படி ?” இப்படியாக அதிகம்  ஆராய்ச்சி செய்யும் நாடு ஜப்பான். கூகிளின் ஒரு புள்ளிவிவரம் சொல்லும் செய்தி இது.

சேட்ஜீபீட்டி டீப்சீக் பஞசாயத்து

உலக அளவில் அதிகமான அளவில் சேட்ஜீபீட்டி’ என்னும் செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்தும் நாடு அமெரிக்கா, 14.07 சதம் பயன்படுத்துகிறது, அதற்கு அடுத்தபடியாக 9.5 சதம் இந்தியாவிலும், 4.73 சதம் பிரேசில் நாட்டிலும் ஐக்கிய நாடுகளில் 3.88 சதமும் பயன்படுத்துகிறார்கள்.

உண்மையாகவே நாம் சேட்ஜிபீட்டி யும் டீப்சீக்கும் வந்த பின்னால்தான் செயற்கை நுண்ணறிவு வந்ததுபோல நாம் பேசிகொண்டிருக்கிறோம், உண்மை அப்படியல்ல, என்று சொல்லுவதுதான் இந்த கடிதம்.

ஆனால் சீனாவின் டீப்சீக் வந்த பின்னால் “சேட்ஜீபீட்டி” யை பின்னுக்கு தள்ளிவிட்டது என்கிறார்கள், நாம் அந்த பன்சாயத்துக்குள் போக வேண்டாம்.

செயற்கை நூண்ணறிவு புதுசா ?

உண்மையாக பார்க்கப்போனால் செயற்கை நுண்ணறிவு என்பது நமக்கு புதிதல்ல. ஏற்கனவே பல வழிகளில் நாம் அவற்றை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நமக்கு அவை செயற்கை நுண்ணறிவா என்று நமக்கு தெரியாது. அதுதான் உண்மை. உதாரணமாக சிலவற்றை பார்க்கலாம்.

தப்பச்சு செய்யாதிங்க

1.     நாம் ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது. அடுத்து என்ன வார்த்தை வரவேண்டும் என்பது நாம் பார்க்கும் படியாக அது திரையில் தோன்றும். அப்படி தோன்ற வைப்பது செயற்கை நுண்ணறிவுதான்.

நாம் தட்டச்சு செய்யும் போது. ஒரு வார்த்தையை. தவறாக தட்டச்சு செய்தால். “தம்பி தப்பா அடிக்கிறீங்க ! இது தப்படிப்பு “ என்று அதை திருத்தம் செய்யும், செயற்கை நுண்ணறிவு.

 முகத்தை காட்டுங்க 

3.      இப்போதெல்லாம் தொலைபேசிகள் “ உங்க முகத்தைக் காட்டுங்க இல்லன்னா கட்டைவிரல் ரேகையை வையுங்க.. “சொல்லுகின்றன. இப்படி  அந்நியர்களிடமிருந்தும் உங்கள் தொலைபேசியை பாதுகாப்பதும்  செயற்கை நுண்ணறிவுதான்.

4.      தொலை பேசியில் அல்லது கணினியில் ஆங்கிலத்தை முறையாக இலக்கண சுத்தமாக பயன்படுத்த வில்லையென்றால், அதுவே திருத்தம் செய்கிறது, “இந்த இடத்தில் ஈஸ் போதாட்திங்க தம்பி.. வாஸ் போடுங்க” என்று இலக்கண திருத்தம் செய்வதும் செ.நு.தான்.

மாதா பிதா கூகிள் தெய்வம்

5.      கூகிள், பிங், யாஹூ ஆகிய தேடு பொறிகளில் எப்படி நமக்கு தேடும் செய்திகள், தகவல்கள், புள்ளி விவரங்கள், அறிவியல் செய்திகள், அரசியல் செய்திகள், ஆகியவற்றை எப்படி சொடக்குப்போடும் நேரத்தில் கொண்டுவந்து கொட்டுவது, “எல்லாம் செயற்கை நுண்ணறிவின் மகிமைதான் கண்ணா !”

அதனால்தானே நாம் “மாதா பிதா குரு தெய்வம்” என்பதை “மாதா பிதா கூகிள் தெய்வம்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். இனி “சேட்ஜீபீட்டி டீப்சீக் முதற்றே உலகு” என்றும் சொல்லுவோம் என நினைக்கிறேன்.

வேணாம் ராஜா இந்த கடுதாசி

 நமக்கு எல்லோருக்கும் அறிமுகமான பிரபலமான யூடியூப், நெட்ஃப்ளீக்ஸ், அமேசான் போன்றவைகளும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள்தான்.

8.      ஜிமெயில் அவுட்லுக் ஆகியவை எப்படி “ஸ்பேம் ஃபில்டர்” ஆக நம்மை “ வேணாம் ராஜா இந்த கடுதாசி உனக்கு வேணாம்“ என்று எச்சரிக்கிறது.

9.      ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகியவை அனைத்தும் செ.நு. தான். இவை எல்லாமே நமது செல் பேசியின் மலிவான பதார்த்தங்கள் ஆகிவிட்டன.

ரோட்டுல அதிக டிராஃபிக்

 10.  இந்த ரோட்டுல டிராஃபிக் அதிகமா இருக்கு, இந்த ரூட்டுல போங்க..இன்னும் 30 நிமிஷத்துல நீங்க போய்ச் சேந்துடுவீங்க” அப்படீன்னு காரில், ஆட்டோவில், என்று நமக்கு வழி காட்டும் “கூகிள்மேப்” கூட செ.நூ.தான்.

 11எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் மூலமாக என்ன நோய் என்று கண்டுபிடிப்பதற்கும் உதவுவதும் இந்த செ.நு. தான்.

ராமனா லட்சுமணனா?

மனித முகங்களின் அடையாளங்களை வைத்துராமனா லட்சுமணனாஎன்று கண்டுபிடிப்பது, முன்பின் பார்க்காத பொருட்களின் புகைப்படத்தை வைத்து “அது கல்லா மண்ணா கனத்த உலோகமா” என்று கண்டுபிடிப்பது,  இலை, பூ, காய், கனி, படங்களை வைத்து, அது இன்ன தாவரம் ? இன்ன செடி ? இன்ன பூ? இன்ன காய் ?இன்ன கனி ? இன்ன மரம்? என்று கண்டுபிடிப்பது எல்லாமும் செயற்கை நுண்ணறிவுதான்.

"சேட்பாட்"டுகள் என்னும் செயலிகள் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைச் சொல்லும். இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி தான்.

உப்பு புளி மிளகாய்

நாம் பயன்படுத்தும் உப்பு புளி மிளகாய், மற்றும் இதர உற்பத்தி பொருட்களின் விலை  இந்த ஆண்டு எவ்வளவு ? ஆது அடுத்த பத்து ஆண்டுகளில் அது   எவ்வளவு இருக்கும் ?” என்று அனுமானிப்பதும், கருத்து சொல்வதும், எச்சரிக்கை செய்வதும், அடுத்த ஆண்டு தங்கம் ஏறி விற்குமா ? இறங்கி விற்குமா ? என்று அறிவியல் ரீதியாக ஜாதகம் சொல்லுவதும் செயற்கை நுண்ணறிவு தான்.

அஞ்சரைப்பெட்டி

"கிட் ஹப்"(GITHUB) என்ற வலைத்தளத்தில், நமது கணினி செயல்கள் திட்டங்கள் ஆகியவற்றைப் பகிரலாம், இது ஒரு நூலகம் மாதிரியும் திட்டங்களை அடுக்கி வைத்துக் கொள்ளலாம். 

பலவகையான கணினி செயல்திட்டங்களை அஞ்சரைப் பெட்டியில் வைப்பதுபோல சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் உள்ளே நுழைந்து பார்த்தால் இது பற்றி இன்னும் கூடுதலாக நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். 

எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள். 

உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள். உங்கள் வேர்களை மறந்துவிடாதீர்கள்.

 பூமி ஞானசூரியன்

Tuesday, February 4, 2025

ARTIFICIAL INTELLIGENCE GATEWAY TO GOLDMINE - மனம் நிறைய மத்தாப்பு கொளுத்தும் செயற்கை நுண்ணறிவு


மனம் நிறைய 

மத்தாப்பு கொளுத்தும்

செயற்கை நுண்ணறிவு

ARTIFICIAL INTELLIGENCE 

GATEWAY TO GOLDMINE

செயற்கை நுண்ணறிவு இளைஞர்களுக்கு

நல்ல எதிர்கால சுய முன்னேற்றத்திற்கு உதவுமா என்று சிலர் கேட்கிறார்கள், இப்படி ஒரு சந்தேகமான கேள்வியே வேண்டாம்.

செவ்வாய் கிரகத்தில் வேலை

செயற்கை நுண்ணறிவு பற்றி தெரியவில்லை என்றால் நம்மை செயற்கை நுண்ணறிவு கைநாட்டு என்று சொல்லிவிடுவார்கள்.

செயற்கை நுண்ணறிவு கையில் இருந்தால் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் எலான் மஸ்கால் நிறுவப்படும் புதிய கிரகத்தில் கூட உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு

ராக்கெட்டில் சீசன் டிக்கெட்

காலையில் 8:00 மணிக்கு பூமியில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கு போய் வேலை பார்த்துவிட்டு சாயங்காலம் மீண்டும் பூமிக்கு திரும்பி விடலாம். அதற்குள் ராக்கெட்டில் சீசன் டிக்கெட் ஏற்பாடு செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.


அதிர்ஷ்ட தேவதை

கண்டிப்பாக நுண்ணறிவு பயிற்சி பெற்றால் அதிர்ஷ்ட தேவதை எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பாள். உங்களை விட்டு அகலாமல் இருப்பாள்

அனுதினமும் உங்களுக்கு அரிதான வேலை வாய்ப்புகளை அள்ளி அள்ளி தந்து கொண்டே இருப்பாள்.

கனவிலும் காண முடியாத சம்பளம்

செயற்கை நுண்ணறிவு உதவியாளராக போகலாம். மெஷின் லேர்னிங் பொறியாளராக போகலாம். ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானியாக போகலாம்.  

அது மட்டுமல்ல இந்த பதவிகளுக்கான சம்பளம் என்பது நீங்கள் கனவிலும் பார்க்க முடியாததாக இருக்கும் என்கிறார்கள். போகிற போக்கை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

கூகிள் நிறுவனம் 

வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சியைப் பெற முடியுமா என்று கேட்கிறார்கள் சிலர். இதற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பை கூகிள் நிறுவனம்  நடத்துகிறது

டி எக்ஸ் என்னும் ஆன்லைன் தளத்தின் மூலம் இதனை சொல்லித் தருகிறது. இதற்காக அதிகப்படியாக நீங்கள் ஒதுக்க வேண்டிய நேரம் ஒரு வாரத்தில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே.

கணினியிடம் பேசும் மொழி

புரக்ராமிங் லாங்குவேஜ் என்று அடிக்கடி சொல்லுவார்கள். அப்படி என்றால் செயல்மொழி என்று அர்த்தம். இதைச் செய், அதை செய், என்று சொல்லுகின்ற மொழியை செயல் மொழி என்று சொல்லலாம். அதாவது நாம் கணினியிடம் பேசும் மொழி. 

கணினிக்கு இடும் கட்டளை

அதாவது கணினியிடம் வேலை வாங்க அதனிடம் பேசுவதற்கு ஒரு மொழி வேண்டும். அதுதான் செயல் மொழி என்று சொல்லுகிறார்கள். 

அதாவது மனிதர்கள் கணினிக்கு சொல்லும் கட்டளை தான் ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்.

பைத்தன் ஜாவா சி பிளஸ் பிளஸ்

அந்த செயல் மொழிக்கும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று சொல்வது மாதிரி தனித்தனி பெயர்கள் உண்டு. 

அவை தான் இந்த பைத்தன் என்பதும் ஜாவா என்பதும் சி பிளஸ் பிளஸ் என்பவை எல்லாம்.

கணினி புரியும் மொழி

பைத்தன் என்பது கணினிக்கும் நமக்கும் புரியும்படியான ஒரு செயல்மொழி. இதனை சுலபமாக கற்றுக் கொள்ளலாம். சுலபமாக பயன்படுத்தலாம்.உபயோகப்படுத்தலாம்

அதில் எவ்விதமான சிரமமும் இல்லை. செயற்கை நுண்ணறிவு மிகவும் அதிகமாக பயன்படுத்தும் செயல்மொழி என்பது இந்த பைத்தன் தான். இதில் ஏகப்பட்ட கருவிகள் (Tools)உள்ளன.

புத்திசாலித்தனம்

ஏகப்பட்ட தகவல்களை சுமந்தபடி இருக்கும் நூலகங்கள்(Libraries) இருக்கின்றன. இந்த இரண்டையும் பயன்படுத்தி சுலபமாக புத்திசாலித்தனமான செயல்பாடுகளை இதன் மூலம் செய்ய முடியும். இதைத் தான் நாம் பைத்தன் என்கிறோம்.

இதுதான் அல்கோரிதம்

அல்கோரிதம் என்பது ஏற்கனவே தயாராக ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஒரு வழிகாட்டி. ஒரு திசை காட்டி, அல்லது ஒரு கருவி, அல்லது ஒரு ஆசிரியர், என்று சொல்லலாம்.

திருப்பத்தூரில் இருந்து சென்னை போக வேண்டும் என்றால் திருப்பத்தூரில் பஸ் ஏறினால் அது வாணியம்பாடி ஆம்பூர் வேலூர் ராணிப்பேட்டை வாலாஜா ஸ்ரீபெரும்புதூர் தாண்டி சென்னை போகலாம், என்று சொல்வது போல ஒரு வழிகாட்டும் மொழி இது.

முதலில் இதைச் செய்ய வேண்டும்

படிப்படியாக ஒரு பிரச்சனையை தீர்க்க உரிய சரியான முறையான வழியை சொல்லும்

அது மட்டுமல்ல ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்றால் முதலில் எதை செய்ய வேண்டும், இரண்டாவது எதனை செய்ய வேண்டும், என்று அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும், என்பதை சரியாக சிறப்பாக செய்து முடிக்க உதவுவது இந்த அல்கோரிதம்கள்

நாம் செய்ய வேண்டியது 

எந்திரங்கள் கற்றல் அல்லது மிஷின் லேர்னிங் என்பது  எந்திரங்களின் கற்றல் என்பது செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதி. சிலவற்றை கணினிகள் கற்றுக் கொள்கின்றன. வகுத்தல் என்றால் என்ன பெருக்கல் என்றால் என்ன என்ற சிறிய அடிப்படையை சொல்லிக் கொடுத்தால் போதும்

அதனை அடிப்படையாகக் கொண்டு பெரிய பெரிய கணக்குகளை எல்லாம் போடுகிறது மனித மூளை. அதுபோலத்தான் கணினியிடம் நீங்கள் ஒரு கோடு போட்டால் போதும் அது உங்களுக்கு ரோடு போட்டு காட்டி விடும்.

இதை மட்டும் தந்தால் போதும்

அதற்கு தேவையான அடிப்படை தகவல்களை அதற்கு தந்து விட்டால் போதும். அதனை வைத்து அது ஆயிரம் வகையான வேலைகளை பார்த்து நம்மை அசத்தி விடும். அதுதான் மெஷின் லேர்னிங் என்பது.

புள்ளிவிவர அறிவியல்

டேட்டா சயின்ஸ் என்பது புள்ளிவிவர அறிவியல். புள்ளிவிவர அறிவியல் என்பது அது பற்றிய ஆய்வு என்பது ஒரு சுலபமான எளிமையான விளக்கம். புள்ளிவிவரம் என்றால் உங்களுக்கு தெரியும்

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருக்கின்றன என்றால் அது ஒரு புள்ளி விவரம். தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை 978 மில்லி மீட்டர் என்றால் அது ஒரு புள்ளி விவரம்.

புள்ளி விவரங்கள் ஆய்வு

புள்ளி விவரங்களை சேகரித்தல் என்பது ஒரு வகையான வேலை. அதனை ஆய்வு செய்வது, இது சரியா தவறா என்று மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இது அதிகமா குறைவா என்று பார்ப்பது இதெல்லாம்தான் அதனை ஆய்வு செய்வது என்பது, இதனைச் செய்வதும் செயற்கை நுண்ணறிவுதான். 

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். 

எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள். 

உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள். 

 பூமி ஞானசூரியன்


மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

  PHYLLOSTACHYS NIGRA கருப்புமூங்கில் மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO “மூங்...