Monday, August 29, 2022

GOMUKHI RIVER OF KALLAKURICHI - கோமுகி ஆறு


"கோமுகி ஆறு" 

அன்பு உடன் பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் ! 

கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உரிய ஆறு. கள்ளக்குறிச்சி திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஓடும் ஆறு இது. 

கல்படை, பொட்டியம், மல்லிப்பொடி, பரங்கிநத்தம், ஆகியவை இதன் துணையாறுகள். கல்வராயன் மலையில் பெய்யும் மழை இந்த துணை ஆறுகள் மூலம் கோமுகி அணையில் வந்து சேர்கின்றன. இந்த அணையில் இருந்துதான் கோமுகி ஆறு உற்பத்தியாகிறது. 

கோமுகி அணை கல்ராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்ப்பரப்பு 360 எக்டர். இதன் மூலம் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2024.29 எக்டர். இதற்காக இந்த அணையில் இருந்து 8 ஆயிரத்து 917 மீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரியார் அருவி, மேகம் அருவி, வெள்ளி அருவி, ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் கல்ராயன் மலை அருவிகள். நல்லூர் கிராமத்தில் மணிமுத்தா நதியுடன் கலக்கிறது. ஆற்றின் குறுக்காக 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளன. கோமுகி ஆற்றின் மூலம் 40 ஏரிகள் தண்ணீர் பெறுகின்றன. 5860 எக்டர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி நடைபெறுகிறது.

புதிய கால்வாய் பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

அடுத்து, உங்களுக்கு இன்றைய கேள்வி: கோமுகி ஆற்றின் குறுக்கே எத்தனை அணைகள் உள்ளன என்று சொல்லமுடியுமா

மீண்டும் நாளை சந்திப்போம், வணக்கம் !

29 ஆகஸ்ட் 22

 

No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...