Monday, August 29, 2022

KADANA RIVER OF THIRUNELVELI - கடனாநதி

 

"கடனாநதி" 

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

நேற்று நாம் கோட்டார் ஆறு எனும் பழையாறு பற்றி பார்த்தோம். இன்று நாம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரிய கடனாநதி என்னும் ஆறு பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். ஆறுகளில் கழிவுகளை சேர்ப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது என்ற சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ? இந்த சட்டம் கொண்டு வந்தது 1986 ஆம் ஆண்டு. இந்த சட்டத்தின் பெயர் "என்விரான்மெண்ட் புரோட்டெக்க்ஷன் ஆக்ட்" 

அடுத்து கடனாநதி பற்றி பார்க்கலாம். பொதிகை மலை என்னும் அகத்திய மலையில் உருவாகி திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் நதி இது. திருப்புடை மருதூர் என்னும் இடத்தில் இது சங்கமமாகிறது.

மொத்தம் 43 கிலோ மீட்டர் தூரம் ஓடும் கடனாநதிக்கு ஐந்து  துணை ஆறுகள் உள்ளன. அவை கல்லார், கருணையார், வீராநதிஜம்புநதி மற்றும் ராமா நதி. 

அரசப்பட்டு, ஆழ்வார்குறிச்சி, தென்கல்காங்கேயன், மஞ்சப்பள்ளி, காக்கவள்ளூர், காங்கேயன் ஆகிய அணைக்கட்டுகள் இந்த கடனாநதியில் கட்டப்பட்டுள்ளன.

 சிவசைலம் என்னும் கிராமத்திற்கு அருகிலுள்ள கடனா நதி நீர் தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. ஆழ்வார்குறிச்சி அருகில் அமைந்துள்ளது இந்த கடனாநதி நீர்த்தேக்கம். நிறைய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக இது மாறியுள்ளது.

கடனாநதி ஆறு தனது ஆறு அணைக்கட்டுகளில் மூலம் உற்பத்தி 38.87 சதுர கிலோமீட்டர் பயிர் சாகுபடிப் பரப்புக்கு பாசன நீரை அளிக்கிறது. 

இன்றைய கேள்வி:  "கடனாடேம்" என்ற பெயரில் ஒரு அணைக்கட்டு குஜராத் மாநிலத்தில் உள்ளது, அந்த அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது ?

அன்பின் இனிய நண்பர்களே ! மீண்டும் நாளை சந்திப்போம். வணக்கம் !

31ஆகஸ்டு 22

 

No comments:

மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

  PHYLLOSTACHYS NIGRA கருப்புமூங்கில் மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO “மூங்...