Tuesday, April 29, 2025

தங்க அரளி ( YELLOW BELLS) மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் MEDICINAL BENEFITS OF YELLOW BELLS (Tecoma Stans) A COMPREHENSIVE GUDE

 #MedicinalBenefitsOfYelloBells #YellowBellsPlantUses #TecomaStansMedicalUses #HerbalMedicineYellowBells #BenefitsOfThangaArali #TraditionalMedicinalPlantsIndia

தங்க அரளி ( YELLOW BELLS) 

மருத்துவப் பயன்கள் 

மற்றும் பயன்பாடுகள்

Awesome Flowers of  Yellow Bells

உங்களுக்கு தெரியுமா? அழகான தங்கரளி. திரும்பிய பக்கங்களில் எல்லாம் பார்க்கலாம். அழகு மரமாக. ஆனால் எவ்வளவு மருத்துவ குணங்களை தன்னிடம் அது வைத்துள்ளது என்று தெரியுமா? அது பற்றி இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது, சீக்கிரமாய் வளர்வது. ஆண்டு முழுவதும் பூப்பது, அரைத்த மஞ்சள் நிறத்தில் கவர்ச்சி காட்டுவது, கொளுத்தும் வெப்பத்தையும் தாங்குவது, தாக்கும் பூச்சி நோய்களை தாக்குப்பிடிப்பது, குறைவான நிலப்பரப்பில் தன்னை வளர்த்துக் கொள்வது, வானத்தை தொட்டுவிட துடிக்காமல் 15 - 20 அடி உயரத்திற்கு வளர்ந்து அடக்கி வாசிப்பது, சிம்புகளை கிளைகளை எவ்வளவு கழித்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வளர்வது, இதெல்லாம் தான் தங்க அரளி மரத்தின் குணங்கள்.

Serrated Margin Leaves of Yellow Bells

அத்தோடு இந்த மரத்தின் மருத்துவ குணங்களையும், என்னென்ன நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளன, என்பதையும் இங்கு  தந்துள்ளேன்.

பல மொழிப் பெயர்கள்:

தமிழ் : தங்க அரளி – THANGA ARALI

கன்னடம் : கோரநேக்லார் – KORANACHELLAR

தெலுங்கு : பச்சகோட்லா – PACHAKOTLA

இந்தி : பிலியா – PILIA

தாவரவியல் பெயர் : டெக்கோமா ஸ்டேன்ஸ் – TECOMA STANS

பொதுப் பெயர் : எல்லோ பெல்ஸ் – YELLOW BELLA

தாவரவியல் குடும்பம் : பிங்னோனியேசி – BIGNONIACEAE

சொந்த ஊர் : விர்ஜீன் தீவு அமெரிக்கா – VIRGIN ISLAND AMERICA

கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளது.

1.     1. உடல் உரமூட்டி (Tonic)

2.     2. சிறுநீர் பெருக்கி (Diuretic)

Fruits of Yellow Bells
3.     3. மேகப்புண் (Syphilis)

4.     4. சக்கரை நோய் (Diabetes)

5.     5. குடற் புழு கொல்லி (Anti helminthic)

6.     6. வயிற்றுவலி (Stomach ache)

இப்பொக்கூட உலகம் பூரா 80 சதவிகிதம் இயற்கையான மருந்துகளைத்தான் பயன்படுத்தறாங்க. 

ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி, ஹோமியோபதி எல்லாமே இயற்கை வைத்திய முறைகள்தான்.

Even Seeds Have Medicinal Properties
ஏற்கனவே  நான் செய்த ஆய்வுகள்படி மருத்துவ குணங்கள் இல்லாத மரங்கள் என்று எதையும் ஒதுக்க முடியாது, ஆனால் நாம்  இன்னும் இவற்றை  சரியாகப் பயன்படுத்த வில்லை என்றுதான் இந்தத் துறையின் வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

தங்க அரளி செடிகளை, நோய்களின் சிகிச்சைக்கு நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா ? “ஆம்”  என்றால் உங்கள் கருத்துகளை “கமெண்ட்ஸ்” பகுதியில் எழுதுங்கள் / பதிவிடுங்கள்.

FOR FURTHER READING

1. NCBI - National Centre For Biotechnology Information. "Medicinal Properties of Tecoma Stans."

https://www.ncbi.nlm.nih.gov

2. Plants For a Feature (PFAF).Tacoma stans - Medicinal Plant Database Entry" https://pfaf.org/user/plant.aspx?Latin Name=Tecoma + stans

3. Journal of Ethnopharmacology, Elsevier (ScienceDirect). "Pharmacological and Traditional Uses of Tecoma stans

https://www.sciencedirect.com/journal-of-ethnopharmacology

பூமி ஞானசூரியன்


Sunday, April 27, 2025

கத்தி சண்டை கற்றுக்கொள்வது: ஓரு பொறுமையான பயணம் கதை - LEARNING SWORD FIGHTING A JOURNEY OF PATIENCE

#swordfighting #LearningSwordmanship #PatienceInMartialArts #TraditionalSwordTraining #GnanasuriabahavanAcademy #MartialArtsStory #DisciplineInSwordFighting #MasteringSwordTechniques #GuruStudentRelationship #TimeToLearnSwordFighting

கத்தி சண்டை 

LEARNING SWORD FIGHTING
கற்றுக்கொள்வது: 

ஓரு பொருமையான

பயணம் {கதை}


இந்த கதை நாயகன் கண நேரத்தில் கத்தி சண்டையை கற்றுக்கொண்டு பெரும் வீரனாக வேண்டும் என்று கனவு காண்பவன். தனது விருப்பத்தைத் தன் குருவிடம் சொன்னான். அவர் என்ன சொன்னார் ?  அவன் நினைத்தது நடந்ததா ? இந்த கதையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

வேகம் தேவை தான். ஆனால் அந்த வேகம் விவேகத்துடன் சேர்ந்தால்தான் எதுவும் சரியாக வரும். அப்படி இல்லன்னு நாம் நினைக்கிற மாதிரி. எதையும் செய்ய முடியாது.

பிள்ளையார் பிடிக்கத் தொடங்கி அது குரங்கு பிடிச்ச கதையாயிடும். அதனால எதையும் சரியா திட்டமிடணும். அதுக்கு போதுமான. காலஅவகாசம் கொடுக்கணும்.

செய்ய வேண்டிய வேலையை முழுசா புரிஞ்சிகிட்டு அதுக்குப் பிறகு திட்டம் போடணும்.

அவசர கோலம் அள்ளி தெளிச்ச மாதிரி. அப்படின்னு சொல்லுவாங்க. அவசர அவசரமா போட்டா அது அள்ளி தெளிச்ச மாதிரி ஆயிடும். கோலம் கோலமா இருக்காது. அது அலங்கோலமா ஆயிடும். 

மனிதனுக்கு ஆசை இருக்கலாம். அந்த ஆசை பெரிய ஆசையா இருக்கலாம். ஆனா அது பேராசையாக இருக்க கூடாது. பெரிய ஆசைப்படலாம். தப்பு இல்ல. ஆனா பேராசைப் படக்கூடாது. அது ஒரு பொருளா பணமா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அத பற்றிய ஒரு கதை தான் இது.

ஒரு ஊர்ல ஒரு இளைஞர். அவனுக்கு கத்தி சண்டை கத்துக்கணும்னு ஆசை. ஆனா. அத சொல்லிக் குடுக்க ஒரு சரியான ஆசிரியர் கிடைக்கல.

கொஞ்ச தூரத்துல ஒரு மலைக் கிராமம் இருக்கு. அந்த கிராமத்துல ஒரு ஆசிரியர் கத்தி சண்டை சொல்லிக் கொடுக்கிறார் அப்படின்னு கேள்விப்பட்டான்.

அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. கேள்விப்பட்ட அடுத்த நாளே அவரப் பாக்க கிளம்பிட்டான். அந்த மலை கிராமத்துக்கு போனான். சுலபமா அவர் இருப்பிடத்தை கண்டு பிடிச்சுட்டான்.

அவருக்கு வணக்கம் சொன்னான். “ஐயா நான் பக்கத்து ஊர்க்காரன். எனக்கு ரொம்ப நாளா ஒரு வாள் வீரனா ஆகணும்னு ஆசை. அதுக்காக ஒரு குருவை தேடிட்டு இருந்தேன். இப்ப தான் உங்களை தெரிஞ்சது” என்று பணிவாக சொன்னான்.

A JOURNEY OF PATIENCE

வாள்சண்டை சொல்லித்தரும் குருநாதர் ரொம்பவும் வயதானவர். அந்த இளைஞன் பேசுவதை அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதுவும் பதிலாக சொல்லுவதற்கு முன்னால் மீண்டும் அவனே பேசினான்.

“ஐயா நான் இந்த நிமிஷமே உங்க மாணவனான சேர முடிவு பண்ணிட்டேன். எவளோ பணம் செலவானாலும் பரவால்ல. எத்தன நாள்ல நான் இந்தப் பயிற்சியை எடுத்துக்கணும் சொல்லுங்க. சீக்கிரமா நான் ஒரு பெரிய வாள்வீரனா வரணும். அதுதான் என்னோட ஆசை. என்று அவசர அவசரமாக பேசினான்.

பேசி முடித்துவிட்டு அந்த குரு என்ன சொல்லுகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்தான்.

அந்த குரு அமைதியாக இருந்தார். எதுவும் பேசவில்லை. ஆனால் மெதுவாக சிரிப்பது மாதிரி தெரிஞ்சது இவனுக்கு.

மறுபடியும் அவன் அவரிடம் கேட்டான். “எத்தனை நாளாகும்? எப்ப நான் பெரிய வாள்வீரனாக  ஆக முடியும் ?. மறுபடியும் அவன் பொறுமையை இழந்து கேட்டான். “எத்தனை நாள் பயிற்சி நான் எடுத்துக் கொள்ள வேண்டும் ?. அப்போது அந்த குரு சிரித்தபடி சொன்னார். தம்பி நீங்கள் முதலில் கத்தி பிடித்து சுமாராக சண்டை போடும் அளவுக்கு கற்றுக்கொள்ளலாம். அதற்கு மட்டும் 10 வருஷம் ஆகும் என்றார். அந்த கத்தி சண்டை குரு.

“என்னது 10 வருஷமா “ என்று ஆச்சரியமாகக் கேட்டான். “நீங்க சொல்லி தர்ற மாதிரி ரெண்டு மடங்கு கூடுதலான நேரத்தை இதற்காக செலவு பண்ணி. நான் இந்த கத்தி சண்டையே கத்துக்கிறேன். இப்ப சொல்லுங்க நான் கற்றுக்கொள்ள எத்தனை நாளாகும் ? “என்று கேட்டான் அந்த இளைஞன்.

வாள் சண்டை என்பது அருங்கலை. அதனை ரொம்பவும் மலிவான ஒன்றாக இந்த இளைஞர் நினைக்கிறான். என்று அந்த குருவுக்கு மனதில் பட்டது.

இப்போது அவர் சொன்னார். “ நீ கூடுதலாக இரண்டு மடங்கு நேரம். செலவு செய்து பயிற்சி எடுத்துக் கொண்டால், நீ முழுசா கத்துக்க 20 வருஷம் ஆகும்” என்று சொன்னார்.

“சாதாரண  பயிற்சி எடுத்தால் 10 வருஷமுன்னு  சொன்னீங்க.. ஆனா நான் அது மாதிரி ரெண்டு மடங்கு நேரத்தை செலவு பண்ணி கத்துகிட்டா. 20 வருஷம் ஆகும்னு சொல்றீங்க... நான் என் முழு நேரத்தையும் கொடுத்து கத்துக்கிறேன். கடினமா உழைப்பேன். நான் எதையும் வேகமா கத்துக்குவேன். இப்போ சொல்லுங்க.  எவ்ளோ  நாள் ஆகும் சொல்லுங்க ?” என்று கேட்டான் அந்த இளைஞன்.

“நான் சொல்லித்தர்றது எல்லாம் ரொம்ப சீக்கிரமா கத்துக்கிறேன்னு சொல்ற... அப்படின்னா என்னோட  நீ 30 வருஷமாவது  தங்கி இருக்கணும்..” அப்படியென்று அந்த குரு அமைதியாக சொன்னார்.

அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் அந்த பயிற்சியில் சேர்ந்தான் அந்த இளைஞன். அப்போது அவன் வயது 20.

“கற்றுக்கொள்வது என்பது வாழ்நாள் முழுக்க தொடர்வது அது ஒரு குறிப்பிட்ட  நாளில் முடிந்து போகாது. அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். ஒரு குறிப்பிட்ட எல்லையில் முடிந்து போகாது..” என்று இன்று சொல்கிறார் அதே மாணவர். ஆனால் இன்று அந்த மாணவருடைய வயது 60. அதே குருவுடன்தான் அவரும் இருக்கிறார்.

கற்றுக்கொள்வது என்பது வாழ் நாள் முழுக்கத் தொடர்வது என்பதைச் சொல்லுகிறது இந்த கதை, இதுபற்றி உங்கள் அபிப்பிராயம், உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்ஸ் பகுதியில் எழுதுங்கள்.

பூமி, ஞானசூரியன்


Saturday, April 26, 2025

எலான்மஸ்க் சூப்பர்மேன் ஆக உதவிய புத்தகங்கள் எவை ? WHICH BOOKS MAKE ELON MUSK A SUPERMAN

 #ElonMusk #Inspiration #Books #Visionary #Reading Habits #AI #SuperIntelligence #ZeroToOne 

#Asimov #Tolkien #FrankHerbert

எலான்மஸ்க்  

சூப்பர்மேன் ஆக உதவிய

புத்தகங்கள் எவை ?

ELON MUSK SUPER HUMAN OF 21ST CENTURY

“இந்த மாதிரி ஒரு ஆளை நான் பாத்ததே இல்லை” என்று ரஷ்ய அதிபர் புடின் சொல்லுகிறார்.

எலான் மஸ்க்கை தெரிஞ்சவங்க அத்தனை பேருமே இப்பிடிதான் சொல்லுவாங்க. அந்த மாதிரி ஆளுதான் எலான்.

எலான் பற்றிப் பேசினால், செவ்வாய் கிரகம் பற்றிப் பேசணும். அதுக்கு முன்னாடி அவர் படிச்ச புஸ்தகங்களப் பற்றிப் பேசணும். அவரோட படிக்கும் குணம் பற்றிப் பேசணும். அப்புறம் புத்தகவாசிப்பு மூலமா இன்றைய இளைஞர்கள் எல்லாரும் எலான்மஸ்க் ஆகணும்.

எலான் மஸ்க் பற்றி ரஷ்ய அதிபர் புத்தின் அவர்கள் கூட, மாஸ்கோ பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசி இருக்கார்.

PUTIN REQUESTS STUDENTS 
TO MODEL ELON MUSK

“எலான் மாதிரி மனிதர்கள் மனித குலத்துல தோன்றுவது ரொம்ப அபூர்வம்.. அதுமட்டுமில்ல பிரபலமான சோவியத் விஞ்ஞானி செர்கெய் கொரோலியோ என்ற சோவியத் விஞ்ஞானி மாதிரி இவர்..

“உலகத்துல முதன்முதலாக வின்வெளிக்கு போன செயற்கைக் கோள் எதுன்னு ஞாபகம் இருக்கா..? ரஷ்யாவின் செயற்கைக் கோள் தான்.. அதோட பெயர் தான் ஸ்புட்னிக். இதை ஏவியது ரஷ்யா.. “

“இதை ரஷ்யாவுக்காக தயாரிச்சது ..ஏவியது எல்லாமே கொரோலியோதான்..  அவர் மாதிரிதான்  எலான் மஸ்க். மாணவர்கள் எலான் மஸ்க் மாதிரி மாறணும்..”

இதுதான் புத்தின் அவர்கள் பேசியது.

அதுமட்டுமல்ல வோஸ்தாக் என்ற விண்கலம் தான் முதன் முதலாக ஒரு மனிதனை விண்வெளிக்கு ஏற்றிக் கொண்டு போனது.

ஆக ஸ்புட்னிக் விண்கலத்தை தயாரிச்சதும் கொரலியோதான். வோஸ்தாக் விண்கலத்தையும் தயாரிச்சதும்  கொரோலியோதான்

ELON LOVES TO READ BIOGRAPHY OF
BENJAMIN FRANKLIN

அது போலத்தான் எலான் மஸ்க்கும், செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்க முயற்சி செய்கிறார்.

ஒரு தகவலை செவ்வாய்க்கு நீங்கள் அனுப்பினால் அங்க போய்ச்சேர 12.5 நிமிஷம் ஆகுமாம். அதுவே சிக்னல் சரியில்லன்னா 22.4 நிமிஷம் ஆகுமாம்.

செவ்வாய்க் கிரகத்துக்கும் பூமிக்கும் இடையே இருக்கும் தூரம் எவ்ளோ தெரியுமா ? ஒண்ணு ரெண்டு இல்ல. இரண்டும் கோடி கிலோமீட்டர்.

மஸ்க் சின்ன வயசிலருந்தே புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சார். கண்டதைத் தின்றால் குண்டனாவான், இது ஒரு பழமொழி. கண்டதைப் படிச்சா பண்டிதன் ஆவான்..அப்பிடி பழமொழியும் உண்டு. பண்டிதன் அப்படீன்னா  நம்பர் ஒன்.  நிபுணன் அப்படீன்னு அர்த்தம். ஆங்கிலத்தில் மாஸ்டர் அப்படீன்னு சொல்றாங்க.

 1.ஐசக் அசிமோவ் எழுதிய நாவல்கள், 2.டவுக்ளஸ் ஆடம்ஸ் எழுதிய  “த ஹிட்ஹைக்கர்ஸ் கைட் டு கேலக்சி”,  3. ராபர்ட் எ ஹெய்ன்லீன் எழுதிய  “த மூன் ஈஸ் ஏ ஹார்ஷ் மிஸ்ட்ரஸ்” இதெல்லாம், எலான் படிச்ச முக்கியமான புத்தகங்கள்.

ISSAC ASIMOV ELON MUSK'S FAVOURITE NOVELIST

“முக்கியமான பிரமுகர்களின் வாழ்க்கைச் சரித்திரம் எனக்குப் பிடிக்கும்.. எனக்கு ரொம்பப் படிச்சது 4. ஆல்பர்ட் ஐண்ஸ்டின், அப்புறம் 5. பெஞ்சமின் பிராங்க்ளின் வாழ்க்கைச் சரித்திரம்..”என்பார் மஸ்க்.

6. ஜே.ஆர்.ஆர் டோல்கின் எழுதிய “த லார்ட் ஆஃப் த ரிங்ஸ், 7. ஃபிராங்க் ஹெர்பெர்ட் எழுதிய “ட்யூன்”.    8. நிக் பாஸ்ட்ராம் எழுதிய “சூப்பர் இண்டலிஜென்ஸ்” ஆகிய நூல்களும் எலான் மஸ்க் விரும்பிப் படித்த புத்தகங்கள்.

9. பீட்டர் தியெல் என்பவர் 44எலான் மஸ்கோடு படித்தவர். அவர் எழுதியது “ஜீரோ டு ஓன்”. இதில் ஒரு வியாபாரத்தை எப்படி தொடங்குவது ? தொடர்ந்து எப்படி வெற்றிகரமாக நடத்துவது ? அது பற்றிய புத்தகம் அது

நிக் பாஸ்ட்ரம் எழுதிய “சூப்பர் இண்டலிஜென்ஸ்” என்ற புத்தகமும் எலான் மஸ்க் எல்லோருக்கும் பரிந்துரை செய்வது.

“ஜீரோ டு ஒன்”  “சூப்பர் இண்டளிஜென்ஸ்” ரெண்டையும் எல்லாருமே படிக்கணும்’னு நினைக்கறேன் “ அப்படீன்னு அடிக்கடி சொல்லுவார், எலான் மஸ்க்

ஜீரோ டு ஒன் பீட்டர் தீயெல் எழுதிய நூல்

MULTIPLE BREAKTHROUGH BOOK
- ELON MUSK

புதியதாக தொழில் தொடங்குவோருக்கு ஒரு வழிகாட்டி இது. அது சொல்லும் செய்திகளை சுருக்கமாக சொல்லுகிறேன்.

“நிறையபேர் வெற்றிகரமா செய்யும் தொழிலை  நீங்களும் செய்யாதிங்க.. பத்தோடு ஒண்ணு பதினொன்னு இல்லாம புதுசா தொடங்குங்க. அப்பொதான் உங்களுக்கு போட்டி இருக்காது”

“உங்க நிறுவனம் மற்ற  நிறுவனங்களைவிட 10 மடங்கு சிறப்பா இருக்கணும்.. புதிய தொழிலை உருவாக்கும்போது விஸ்தாரமா சிந்தியுங்க..இதுல கஞ்சத்தனம் வேண்டாம்.. நீண்ட காலத் திட்டமாக திட்டம் போடுங்க..அதுல  ஒரு சூட்சமத்தை ரகசியமாக வச்சீக்கங்க.. யார் காதுலயும் போடாதிங்க.

பழைய பஞ்சாங்கமா இருக்காதிங்க..மாற்றம் வேணும்னா நான் சொல்றதை கேளுங்க”  என்கிறார் பீட்டர் தீயெல் அவர்கள். இதுதான் இந்த நூலோட சாராம்சம்.

அடுத்து “சூப்பர் இண்டலிஜென்ஸ்”  நிக் பாஸ்ட்றம் எழுதியது.

MUSK SAYS IT'S WORTH READING

செயற்கை நுண்ணறிவு கொடிகட்டி பறக்கும் வேளை இது ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகள் கூட “சேட் ஜிபிடி” கொண்டு ஹோம்வொர்க் செய்யும் செயற்கை நுண்ணறிவு யுகம் இது.

செயற்கை நுண்ணறிவு என்னென்ன செய்யப்போகிறது என்று சொல்லும் நூல். அனேகமாக அந்த வகை நூல்களில் இது முதலாவதாக இருக்கலாம்.

“நல்லது செய்யுமா கெட்டது செய்யுமா ? மனிதனால் உருவாக்கப் பட்டிருந்தாலும் இது மனிதனை ஒரங்கட்டி விடுமா ?” என்னும் சந்தேகத்தை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் நூல்.

“மனிதனால் உருவாக்கப்படும் இந்த இயந்திரங்கள் எல்லாம் வரும் காலத்தில் மனிதனைவிட அதி புத்திசாலி ஆகிவிடுமா ? அது மனிதனுக்கு அபாயகரமாக மாறிவிடுமா ?” என்றெல்லாம் பேசுகிறது இந்த நூல்.

சூப்பர் இண்டலிஜென்ஸ் என்பது மூன்று வகை, ஒன்று வேகமானது, இரண்டு கூட்டாக இணந்து செயல்படுவது, மூன்று மனிதனைவிட மென்மையாக. மேன்மையாக, ஆழமாக செயல்படுவது. இந்த மூன்றைத்தான் சூப்பர் இண்டலிஜென்ஸ் என்கிறார் ஆசிரியர் நிக் பாஸ்ட்றம்.

இன்னொன்று தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் அறிவு இதனை ஆங்கிலத்தில் “ரிகர்சிவ் செல்ஃப் இம்ம்பூரூவ்மெண்ட் என்கிறார்கள். அதனை இயந்திரங்களுக்கு தாரை வார்க்கலாமா?

அப்படி என்றால் வரம் குடுத்தவன் தலையிலேயே கைவைக்குமா  செயற்கை நுண்ணறிவு என்று கவலை கொள்ளுகிறது இந்த “சூப்பர் இண்டெலிஜென்ஸ்” புத்தகம்.  

எது எப்படியோ புத்தகங்கள் படித்து ஒரு சூப்பர் மேன் ஆனவர், ஒரு ஸ்பைடர்மேன் ஆனவர், ஒரு அயன் மேன் ஆனவர்  எலான் மஸ்க், இதனைப் படிக்கும் நீங்கள் ஒருத்தர் கூடவா முயற்சி செய்ய மாட்டிங்க ?

இந்த புத்தகங்களை   நீங்க படிச்சு இருந்தா உங்கக் கருத்து என்னன்னு சொல்லுங்க, கமெண்ட் பகுதியில எழுதுங்க.

பூமி ஞானசூரியன்

Friday, April 25, 2025

வாய்ப்புக்களை பயன்படுத்தும் கலை -EMBRACING THE WAIT: TURNING INTO OPPORTUNITY

#WaitingForOpportunities #PatienceAndGrowth #EmbracingTheWait # TransformingPatience #OpportunityInWaiting #PersonalDevelopment #MindfulWaiting # GrowthMindset #SeizingOpportunities #Life'sWaitingPeriod

வாய்ப்புக்களை 

பயன்படுத்தும் கலை

STRIKE WHILE THE IRON IS HOT 

வாழ்க்கையில் பல நேரங்களில் திசைமாறிப்போகிறோம். ஆனாலும் இந்தப் பிரபஞ்சம் நமக்கு வாப்புகளை அள்ளித்தான் தருகிறது, அதனை பயன்படுத்திக் கொண்டால் வெற்றி உங்கள் காலடியில் சரணடையும்.

குடோ ன்னு சொன்னா போதும் ராஜாவே எழுந்து நிப்பார். அவ்ளோ மரியாதை. சாதா ஜனங்க பேர்ல உசிரையே வச்சிருப்பார். எப்பவும் ஒடிகிட்டே இருப்பார்…” இப்படி எல்லோருமே குடோ ஜென் குரு பற்றி பேசுவார்கள். அவர்கள் சொல்வது சரியா தவறா என்று இந்த கதை சொல்லுகிறதா ?

அவரைத் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபலமான ஜென் துறவி. துறவிகளுக்கெல்லாம் தலைமை துறவி என்று சொல்லுவாங்க.

குடோ ஒரு நாள் கிராமத்துப்பக்கம் போயிட்டு இருந்தார். நல்ல மழை. வானம் பொத்துக் கொண்டு ஊற்றியது. குடோ மழையில் சிக்கிக் கொண்டார்.

தொப்பரையாக நனைந்துவிட்டார். அந்த நேரம் பார்தது கால் செறுப்பின் வார் அறுந்து போனது. அதனை பழுதுபார்க்க முடியாத அளவிற்கு பிய்ந்து போனது. அதனால் குடோ அதனைத் தூக்கி எறிந்து விட்டு வெறுங்காலால் நடந்தார்.

அங்கு ஒரு சிறிய வீடு இருப்பதைப் பார்த்தார். அந்த வீட்டின் வெளியே ஒரு மரத்தால் செய்த ஸ்டேண்ட் ஒன்றில் இரண்டு ஜோடி செறுப்புகள். அது விற்பனைக்கு என்பது தெரிந்தது. உடனே அந்த வீட்டிற்குப் போனார். விலை கேட்டார். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பிட்டார்

அப்போது மழை, பேய் மழைபோல ஊற்றிக் கொண்டிருந்தது. “ஜாஸ்தியா மழை பேயுது இருந்து போங்க சாமி என்றாள் அந்த வீட்டின் பெண்மணி.

அவரும் “சரி” என்று திண்ணையில் உட்கார்ந்தார். அப்போது அந்தப் பெண்மனி வயதான தனது தாயாரையும் அவருக்கு அறிமுகப்படுத்தினாள். தனது குழந்தைகளையும் அறிமுகம் செய்தாள்.

மழை விடுவதாகத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் ஜென்குரு புத்தர்சிலையை எடுத்து வைத்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். பிரார்த்தனை முடிந்த பின்னரும் மழை விடுவதாகத் தெரியவில்லை. “ராத்திரி நேரத்துல நீங்க எங்க சாமி போகப்போறீங்க இங்கயே தங்கிட்டு காலையில் போங்க” என்றாள் அந்தப் பெண்மணி

“உங்க விட்டுக்காரர் என்ன செய்யறார் ? எத்தனை குழந்தைகள் ? உங்க விட்டுக்காரர் சம்பாதனை போதுமா ? “ என்றும் கேட்டார் குடோ

“அதை ஏன் சாமி கேக்கறீங்க. வேலை முடிஞ்சி வந்தா நேரா சாராயக்கடைதான். நடுராத்திரிக்குதான் ஊட்டுக்கு வரும். ரொம்பக் குடிச்சிட்டா எங்கயாச்சும் விழுந்து கெடக்கும். நாங்க போயிதான் கைத்தாங்கலா கூட்டிகிட்டு வரணும்.” குடோ அவர்களுக்கு கேட்கவே சங்கடமாக இருந்தது

மடை திறந்த வெள்ளம் போல அந்தம்மா பேசிக் கொண்டே போனார். “என்ன வேலை செய்யறார்? தினமும் வேலைக்குப் போறார? எவளோ சம்பளம் ?” என்றார் குடோ

“கூலிதான் சாமி. தினமும் அம்பது நூறுன்னு கிடைக்கும். அதை வாங்கிகிட்டு அது சாராய கடைக்குப் போயிட்டா, அஞ்சிப்பத்து கூட எங் கைக்கு வராது.. அஞ்சி புள்ளைங்கள எப்படி காப்பாத்தறது சாமி ?”

“வேலை வெட்டி கிடைக்கலன்னா ஊட்டுல இருக்கற பாத்திர பண்டங்கள  எடுத்துட்டு போயி அடமானம் வச்சிக் குடிப்பாரு.. ரொம்ப கறாரா கேட்டா.. மட்டு மரியதை இல்லாமப் பேசுவாறு.. மாட்டை அடிக்கறமாதிரி  அடிப்பாரு. கையில கிடைச்சதை எடுத்து அடிப்பாறு.. எம் பையன் வந்து தடுப்பான், அவனையும் அடிப்பாரு..”

அப்போது குடோ அந்தா பெண்ணிடம் கொஞ்சம் பணம் கொடுத்தார். “சாப்பிடுவதற்கு நிறைய வாங்கிக் கொண்டு வாம்மா” என்றார். “நான் இன்று இரவு சாப்பிட்டுவிட்டு இந்தத் திண்ணையில் படுத்துக் கொள்ளுகிறேன்..” என்றார். அந்தப் பெண்மணி பழங்கள் ரொட்டி மற்றும் பானங்கள் வாங்கி வந்தார் குடோவிடம் கொடுத்துவிட்டுப் போனார் அவள் வீட்டிற்குள் சென்றதும் குடோ தனது தியானத்தை மறுபடியும் தொடங்கினார்.

நள்ளிரவு ஆனது. பெருஞ் சப்தத்துடன் அந்த வீட்டின் கதவு “தடார்” என்று திறந்தது. கதவு உடைந்து  விட்டதோ என்று பயந்தார் குடோ.

அந்த வீட்டுக்காரன். அந்த பெண்மணியின் கணவன். குடிகாரன்.  வீட்டிற்குள் வந்தான். சாராயவாடை தூக்கலாக இருந்தது

“பொறுக்கி நாயே எங்கடிப் போன ? அதுகுள்ள படுத்துட்டியா ? எனக்கு யாருடி போடுவான் சாப்பாடு ? உங்கப்பன் வந்து போடுவானா ? ங்கோத்தா வந்து போடுவாளா ? “என்று கேட்டு  குழறிக்குழறிப் பேசினான்.

அப்போது குடோ எழுந்து அவனிடம் சென்று பேசினார், “நான் ஒரு வழிப்போக்கன். மழை வந்ததால இங்க அனுமதி வாங்கிகிட்டு தங்கிட்டேன். உங்களுக்காக ரொட்டி மீன் சரக்கு எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். நானும் இன்னும் சாப்பிடல. உனக்காகத்தான் காத்திருக்கேன் “ என்று சொல்லி அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போனார்.

என்ன ஆச்சரியம் ! அவன் எதுவும் பேசவில்லை. குடோவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவரை வணங்கினான். குடோவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவரோடு உட்கார்ந்து வயிறு முட்ட சாப்பிட்டான். கொஞ்சம்  குடித்தான். அவ்வளவுதான். அப்படியே சாய்ந்து குறட்டையுடன் தூங்கினான்.

அவரோடு சாப்பிட்டு முடித்த குடோ தனது தியானத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த நாள் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டுக் கிளம்பினார். அப்போது அவன் கண்விழித்து குடோவைப் பார்த்தான்.

“ஆமா நீங்க யாரு ? எண் வீட்டுல நீங்க என்ன பண்றீங்க ?” என்று அதிகாரமாகக் கேட்டான், அந்தப் பெண்ணின் குடிகாரக் கணவன்

“குடோ என் பெயர்.  நான் ஒரு துறவி. கியோட்டோ நகரைச் சேர்ந்தவன் “ என்று சொல்லிவிட்டு எப்படி இங்கு வந்தார் ? மழை எப்படி வந்தது ? அவர் மணைவி எப்படி அவருக்கு உதவினாள் ? என்று விளாவாரியாகச் சொன்னார்

“உங்க பேரு எனக்குத் தெரியும். ராஜாவுக்கே நீங்க புத்திமதி சொல்லுவீங்க.. நீங்க எனக்குத் தெரியும்..” அதன் பிறகு அவன் குரலில் பணிவு தெரிந்தது

“என்னை மன்னித்து விடுங்கள்.. தெரியாமல் பேசிவிட்டேன். மரியாதை குறைவாகப் பேசிவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள் நான் உருப்படாதவன். நான் ஒரு குடிகாரன்” என்று சொல்லி அழுதான்

குடோ அவனை சமாதானப்படுத்தினார் “நீ நல்லவன் உனக்கு நல்லது கெட்டது தெரிகிறது.. உன் மனைவியை குழந்தைகளைப் பார். யார் அவர்களைக் காப்பாற்றுவார்கள்..” என்று குடோ கேட்க கேட்க அவன் அமைதியாக இருந்தான்

குடோவுக்கு செத்துப்போன அவன் அப்பா பேசுவது போல இருந்தது குடோ பேசுவது அவன் மானத்தைத் தொடுவது போல இருந்தது.

அவர் பேசி முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு குடோ அங்கிருந்து கிளம்பினார்.

“நான் உங்கள் பைகளை தூக்கிக் கொண்டு கொஞ்சதூரம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மூட்டையாக இருந்த அவருடைய பையினை அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். பின்னர் குடோ அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார்.

குடோவின் மூட்டையை தூக்கிக் கொண்டு அவர் பின்னால் நடந்தான் அவன் மனைவியும் குழந்தைகளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

MAKE HAY WHILE THE SUN SHINES

இப்போது சுமார் 3 மைல் தூரம் நடந்திருப்பார்கள் “சரிப்பா ரொம்ப மகிழ்ச்சி ! நீ வீட்டுக்கு திரும்பிப் போ “என்று சொன்னார் குடோ

“உங்க மூட்டை கனமா இருக்கு. இந்த ரோடும் சரியில்ல. இன்னும் ஒரு அஞ்சி மைல் நான் தூக்கிட்டு வாறேன்” .. என்றான் அவன்

பாறைபோல இருக்கமாக வறண்டிருந்து அவன் முகம். அந்த முகத்தில் ஈரம் இல்லாமல் வற்ண்டிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. அமைதியாக அவர் “சரி” என்றார். வேறு எதுவும் பேசவில்லை.

ஐந்து மைலும் நடந்து முடித்தார்கள். “இது போதும் இனிமே நான் என் மூட்டையை சுமப்பேன்.. எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை.. நீ போ உனது மனைவியும் பிள்ளைகளும் உனக்காக காத்திருப்பார்கள்” என்றார் குடோ

இப்போது அவன் குனிந்து குடோவின் பாதங்களைத் தொட்டு “சாமி என்னை இன்னும் 10 மைல் உங்களோடு வர அனுமதி தாருங்கள். என்னை விரட்டினால் நான் எங்கே போவேன் ? அது உங்களுக்குத் தெரியும்” என்றான் குடோ எதுவும் பேசாமல் அவன் முகத்தைப் பார்த்த மறுபடியும் சரி என்றார்.

அடுத்த 10 மைல் நடந்து முடிந்தது இப்போது குடோ கறாரான குரலில் சொன்னார் “இது போதும். நீ திரும்பிப் போ. உன் மனைவியைப் பார்த்துக் கொள். உன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்..” என்றார். இந்த முறை மிகவும் உறுதியான கண்டிப்பான குரலில் சொன்னார் குடோ.

“சுவாமி இனிமேல் என்னால உங்கள விட்டு போக முடியாது.. இனி முழு நாட்களையும் உங்களோட தான் இருப்பேன் இனிமே எப்பவும் உங்களோட தான் இருப்பேன்..” அதற்குமேல் அவனை சமாதனம் செய்ய முடியவில்லை.

OPPORTUNITY KNOCKS BUT ONCE

பல ஆண்டுகள் உருண்டோடின. அந்த கிராமத்துப் பெண்ணின் குடிகாரக் கணவன் குடோவின் பிரதான சிஷ்யன் ஆனான். மூ நான் என்பது அவன் பெயர்

மூ-நான் பின்னாளில் குடோ வைப்போல ஜப்பானில் பெரிய ஜென் குரு ஆனான் அவன் கீழ் நூற்றுக் கணக்கான மாணவர்கள் ஜென் பயிற்சி பெற்றார்கள்.

“ஒரு நாள் ஒரு தேவதை வரும் காத்திருங்கள். அதன் அழகிய கரங்களைப்  பிடித்துக்கொள்ளுங்கள். அது வேறு உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும்” தனது மாணவர்களுக்கு இதைத்தான் காலம் முழுக்க போதித்து வந்தார்.

இது போன்ற மனிதர்களை நீங்கள் சந்தித்த அனுபவம் இருந்தால் பகிருங்கள். இது போல நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் இருக்கிறார்களா ? இந்த கதையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள்.

பூமி ஞானசூரியன்

 

Thursday, April 24, 2025

பஞ்சுமூட்டை நெருப்புத் துண்டு சுமந்த கதை THE COTTON BAGS CARRIED THE FIRE SPARKS

#GenStory #SaintAnd Disciple #AttachmentLettingGo #SpiritualTeaching #JudgementalMind #MindClutter #InnerPiece #Mindfulness #Ego #Detachment #FireOfThought #MentalBurden

பஞ்சு மூட்டை 

நெருப்புத்துண்டு 

சுமந்த  கதை
THE DISCIPLE CARRIED HER
IN HIS MIND

ஒரு அழகிய இளம்பெண்ணை ஒரு ஜென்துறவி தோளிலும் அவருடைய மாணவ துறவி மனதிலும் சுமந்த கதை, படியுங்கள். 

தான்சான் என்ற ஒரு புத்தமதகுரு இருந்தார். அந்த குருவிடம் எக்கிடோ என்ற மாணவத் துறவி இருந்தான்.

தான்சான் வயதான துறவி. ஆனால் எக்கிடோ மாணவத்துறவி, வயசுபையன்.

ஒரு நாள் தான்சான் தன்னுடைய மாணவர்களுக்கு புத்தமத தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பொதுவாக துறவிகள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? எப்படி பேசவேண்டும் ? பஞ்சு நெருப்பிடமிருந்து  விலகி இருக்க வேண்டும் ?  பையன்கள் பஞ்சுமாதிரி. சுலபமாய்ப் பற்றிக் கொள்ளுவார்கள்.  இது பற்றி மிகவும் விளக்கமாகச் சொன்னார்.

அடுத்த நாள் அந்தத் தலைமைக்குருவும் எக்கிடோவும் ஒரு கிராமத்திற்கு போய்க் கொண்டிருந்தார்கள்.

 அப்போது அவர்கள் ஒர் ஆற்றினை கடந்து செல்ல வேண்டி இருந்தது.

 அவர்கள் இருவரும் ஆற்றங்கரையை அடைந்தார்கள்.

ஆற்றின் இருகரையும் தொட்ட மாதிரி தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

 தண்ணீரில் மரத்தின் உடைந்த கிளைகள் செடிகள் அவற்றின் இலைகள் பூக்கள் எல்லாம் அடித்துக் கொண்டு வந்தன.

 சிவப்பு நிறத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. புதுவெள்ளம் எனபது தெரிந்தது.

 ஆற்றங்கரையில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

SHE NEEDS HELP TO
CROSS THE RIVER

அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாள்.

 பார்க்க அம்மன் சிலைபோல இருந்தாள். சிவப்பு பச்சை என அமுத்தமான நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள்.

அவள் ஆற்றில் ஒடும் தண்ணீரைப் பார்த்தபடி தரையில் நின்று கொண்டிருந்தாள்.

இவர்களும் அவள் அருகில் போனார்கள்.

அங்கு சென்றதும் அந்த வயதான துறவி அவளை விசாரித்தார்.

ஏன் கரையிலேயே நிற்கிறாய் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டுமா என்று கேட்டார்.

"ஆமாம் ஐயா,  அக்கரையில் இருக்கும் கிராமத்துக்கு நான் செல்ல வேண்டும். இப்படி வெள்ளம் வரும் என நான் நினைக்க வில்லை. யாரும் உதவி இல்லாமல் பாதுகாப்பாக இந்த ஆற்றை என்னால் கடக்க முடியாது என்று சொன்னார்.

உனக்கு ஆட்சேயான இல்லை என்றால் "நான் உனக்கு உதவிகிறேன்" என்று சொல்லி கீழே உட்கார்ந்து என் தோளில் ஏறிக்கொள்" என்றார்.

அவளும் வசதியாக ஏறி உட்கார்ந்தாள். வயதான துறவி அவளைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்.  வசதியாக இறங்கி தண்ணீரில் நடந்தார்.

அந்தப் பெண் அவர் தோள்களின் இருபக்கமும் கால்களைப் போட்ட படி துறவியின் தலையை கைகளால் பிடித்துக் கொண்டிருந்தாள்.

இப்போது அந்த இனைய துறவிக்கு கோபம் கோபமாக வந்தது. இந்த வயசான காலத்தில் இப்படி ஏன் செய்ய வேண்டும் ? அவருடைய ஆரோக்கியத்திற்கு இது  நல்லதல்ல.

இவர் ஏன் தூக்கி சிரமப் பட வேண்டும் ? என்னிடம் சொன்னால் நான் தூக்கிக் கொண்டுவர மாட்டேன் என்று சொல்வேனா ? "

இப்படி யோசித்தபடி அவன் கரையிலேயே நின்று விட்டான்.

திரும்பிப் பார்த்து குரு குரல் கொடுத்தார். உடனே பின்னால் சென்றான் சீடன்.

நேற்று எப்படி சொன்னார் பெண்கனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆண்கள் பஞ்சிமாதிரி பெண்கள் நெருப்பு மாதிரி.. பக்கத்தில் போனால் பற்றிக் கொள்ளூவீர்கள் " என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

குருவுக்கு ஒரு சட்டம் மாணவனுக்கு ஒரு சட்டமா ? இப்படி ஒரு புயல் மாணவன் மனதில் அடித்துக் கொண்டிருந்தது. 

குரு அந்த அழகான இளம் பெண்ணை தோளில் சுமந்தபடி எதைப்பற்றியும் கவலைப்படாமல் அக்கரையை போய்ச் சேர்ந்தார்.

 அந்தப் பெண்ணை தோளில் இருந்து இறக்கி விட்டார் குரு.

" மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அந்தப்பெண்.

 அன்று மாலை வரை அந்த சீடன் குருவிடம் எதுவும் பேசவில்லை. அன்று இரவும் எதுவும் பேசவில்லை. அது வரை குரு எப்படி அந்தப் பெண்ணை தோளில் துக்கி வரலாம் என்றே யோசித்து கொண்டிருந்தான்.

அடுத்தநாள் காலை அவன் எழுந்தவுடன் உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும்.

"ஏன் இவ்வளவு தாமதம் ? நேற்றே கேட்க வேண்டும் என்று நினைத்தாய் அல்லவா கேள் " என்றார் சிரித்துக்கொண்டே தலைமைக் குரு.

"நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை தோளில் சுமந்து கொண்டு வந்தீங்கள்" என்று கேட்டான் சீடன்.

தலைமைக்குரு சிரித்துக்கொண்டே சொன்னார் "நேற்று மாலையே அந்தப் பெண்ணைத் தோளிலிருந்து இறக்கி விட்டுவிட்டேன்..  நீ அவளை இன்னும் கூட மனசில் சுமந்து கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன் என்றார். 

அந்த சீடன் "என் மனதில் "சுருக்" கென்று  தைத்தது ஞானமுள்" என்று நிறையநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தான், இப்படித்தான் அந்த ஜென் கதை நிறைவடைகிறது. ஆக இரண்டு பஞ்சு மூட்டைகள் நெருப்பு கங்கு சுமந்த கதை இது.

ஆனாலும் பஞ்சும் நெருப்பும் கதை சொன்ன தான்சான் செய்தது சரியா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

பூமி ஞானசூரியன்

Wednesday, April 23, 2025

ஆட்டுக்கிடா சண்டை பின்வாங்கி தாக்கும் நுண்ணறிவு GOAT FIGHTING :THE ART OF STEPPING BACK -A GERMAN FOLKLORE

#GoatFightingFolklore #GermanFolkloreStories #StrategyInFighting #StepbackToStrike #FightingTechniques #LifeLessonFromAnimals #GoatCmobatStrategy #PsychilogicalWarefareInNature 

ஆட்டுக்கிடா சண்டை

பின்வாங்கி தாக்கும்

நுண்ணறிவு

THE GOATS GO BACK STRATEGY TO MAKE THE HIT STRONG

சண்டை என்பது நேரடியாக தாக்குவது மட்டுமல்ல. சில நேரங்களில் பின்வாங்கி பின்னர் கடுமையாக தாக்கும் நுட்பத்தை ஆட்டுகிடாக்கள் சண்டை போடும்பொது பார்க்கலாம். அதுபற்றி ஜெர்மனியில் சொல்லப்படும்  நாட்டுப்புற கதை இது.

“அடைந்தால் மஹாதேவி இல்லை என்றால் மரணதேவி” இந்த வசனத்தை சொன்ன உடனே பி.எஸ் வீரப்பாவின் முகம் ஞாபத்துக்கு வரும். இது உண்டு இல்லன்னு பாக்கறது.

“முடிஞ்சா அடக்கறேன் இல்லன்னா அடங்கிபோறேன்” இந்த வசனத்தை சொன்ன உடனே நகைச்சுவை நடிகர்  நாகேஷ் நமக்கு ஞாபகத்துக்கு வரும். எப்படியோ பிரச்சினை வரக்கூடாது.

டூபீ ஆர் நாட்டு டூபி அப்படின்னா ஷேக்ஸ்பியரின் “ஹேம்லட்” நாடகம் ஞாபகத்துக்கு வரும். இது உண்டு இல்லன்னு பாக்கறதுதான். அதனாலதான் அது துன்பியல் நாடகமா முடிஞ்சது.

“வரும் ஆனா வராது” அப்படிச் சொன்னா நகைச்சுவை வடிவேல் ஞாபகத்துக்கு வரும். இதுல  பிரச்சினை வரும் ஆனா வராது.

அதே மாதிரியான ஜெர்மனி நாட்டு ஆட்டுக்கிடா சண்டைக்கதை.

PULLING THE BOWSTRING BACK
TO PUSH THE ARROW FRONT

ஜெர்மனி நாட்டுல ஒரு அழகான ஊர். அந்த ஊர்ல ஒரு அழகான ஓடை. அதுல எப்பவும் சிலுசிலுன்னு தண்ணி ஓடிகிட்டே இருக்கும். அந்த ஒடைக்கு மேல ஒரு சின்ன பாலம். அகலம் ரொம்ப கம்மி. அதுல ஒருத்தர் பின்னாடிதான் ஒருத்தர் போக முடியும். ஒருத்தர் வராங்கன்னா அடுத்த முனையில் இருக்கறவங்க அவங்க வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்கணும்.

இந்த மாதிரியான அந்தப் பாலத்துல இரண்டு முரட்டு ஆடுகள், இந்த  முனையில் ஓன்று, நடக்க ஆரம்பிச்சது. அந்த சமயம் அதே அளவு சமமான முரட்டு ஆடு பாலத்துக்குள்ள நுழைஞ்சது. ரெண்டு ஆடுகளும் நடந்து வந்து பாலத்தின் இப்பகுதியில் வந்து எதிர் எதிரா நிண்ணதுங்க.

ஒண்ணோட ஒண்ணு முறைச்சிப் பாத்ததுங்க. ரெண்டு ஆடுங்களோட கண்ணும் சிவப்பா மாறிடுச்சி. கோபம் ரெண்டு ஆடுகளோட கண்ணுலயும் கொப்பளிச்சிகிட்டு இருந்தது

அடுத்த நிமிவும் மடார் மடார்ன்னு முட்டிக்க ஆரம்பிச்சது. இந்த ரெண்டு ஆடுங்க முட்டிகிற சத்தம் ஊரு முழுக்க கேட்டிச்சி. பின்னாடி போகுதுங்க அப்புறம் வேகமா முன்னாடி ஒடி வந்து முட்டுக்கிதுங்க

ஒடைக்கு அந்தபக்கமும் இந்தப் பக்கமும் எகப்பட்ட ஜனங்கள். எப்படி அந்த ரெண்டு ஆடுகளையும் சமாதானப் படுத்தறது அப்படின்னு ஜனங்க பேசிகிட்டாங்க.

ரெண்டு ஆடுகளும் பின்னாடி நடந்து வந்து பிறகு வேகமா முன்னாடி ஓடி தலையால முட்டிகிட்டதுங்க. எந்த நேரத்திலயும் எதாவது ஒரு ஆட்டோட மண்டை உடையலாம். இல்லன்னா இந்த ரெண்டு ஆட்டோட மண்டையும் உடையலாம் என்று பேசிக் கொண்டார்கள்.

முட்டிக் கொண்டிருக்கும் இரண்டு ஆடுகளில்  “டேய் நான் சொல்றேன் இடது பக்க ஆடுதான் ஜெயிக்கும்” என்றான் ஒரு இளைஞன்

“நீ வேணுன்னா பாரு வலதுபக்க ஆடுதான் தான் ஜெயிக்கும்” என்றான் இரண்டாவது இளைஞன்.

A TRIBE WOMEN PULLS BACK THE BOW STRING

இரண்டு பேரும் 100 கெர்மனி ரூபாய் பந்தயம் கட்டி விட்டு ஜெயிக்கும் ஆடு எது என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். காரணம் இரண்டும் ஒரே நிறம்.

அந்த சமயம் யாரும் எதிர்பாரத விதமாக இரண்டு ஆடுகளும் பாலத்திருந்து தவறி ஒடைக்குள் விழுந்தன. இரண்டும் அந்த ஓடைக் கரையில் மூச்சிபேச்சி இல்லாமல் கிடந்தன

இப்போது அந்த ஒடையில் இரு கரைகளிலும் நின்றிருந்த ஆடுகள் பாலத்தில் ஏறி நடந்தன. அது மிகவும் சிறிய பாலமாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று இடம் தந்து ஒதுங்கி பிரச்சனை இல்லாமல் நடந்து சென்றன. அதன் ஊடாக சில மனிதர்களும் அந்தப் பாலத்தில் எறி நடந்து சென்றார்கள்.

“விட்டுக் குடுத்துப் போனா நாம ஒருத்தருக் கொருத்தர் முட்டிக்க வேணாம். நம்ம தலைக்கும் சேதாரம் இல்லை “ என்று ஒரு ஆடு சொல்ல மற்ற ஆடுகளும் “ஆமாம் ஆமாம்” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பாலத்தைக் கடந்து போயின.

ஆடுகள் சண்டை போடும்போது முதலில் பின்னால் சென்று பின்னர் வேகமாக ஒடி எதிராக நிற்கும் ஆட்டைத் தாக்கும். பின்வாங்குவது என்பது கோழைத்தளமானது அல்ல. அது தனது தாக்குதலை வேகப்படுத்த விரைவு படுத்த உதவும். போராளிகள் இதனை கடைபிடிக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் அதில் ஆட்டு சண்டையைத்தான் சிறந்த போர்வீரமாகக் காட்டுகிறார்

ஊக்கம் உடையான் ஒழுக்கம் பொருந்தர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

அதற்கு சொல்லும் பொருள் இது தான், “ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சணடையிடும் ஆட்டுக்கிடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.”

பின்னாடி போங்க ஆனா அது முன்னாடி

போகறதுகக்கான உபாயமா இருக்கணும்.

சண்டை போடுவதற்கு இந்த முறை சரியா தப்பா என்று உங்கள் கருத்தை அன்பு கூர்ந்து பதிவிடுங்கள்.

பூமி ஞானசூரியன்.

Sunday, April 20, 2025

தசரத் மஞ்சி காதலுக்கு மலைப்பாதை போட்ட மாமனிதர் - DHASARATH MANJI WHO CARVED A ROAD FOR LOVE

 #DhasarathManjiRealStory #MountainManIndia #ManCutsMountainRoadBihar #LoveSacrificeRealStoryIndia #22YearsMountainRoad #DhasrathManjiBiography #gnanasuriabahavan academy  #ManjiTheMountainManMovie #PostalStamp2016 #InspirationalIndianHero #GehalaurVillageStory

தசரத் மஞ்சி காதலுக்கு 
மலைப்பாதை போட்ட மாமனிதர்

A STAMP WAS RELEASED IN 2016 BY GOVERNMENT OF INDIA
AS NATIONAL RECOGNITION

தொடர்ந்து ஒரு காரியத்தில் கவனம் செலுத்தினால் எவ்வளவு பெரிய சாதனையும் செய்து முடிக்கலாம் இதுக்கு அடையாளமான பெயர்தான் இந்த தசரத் மஞ்சி சாலை.

இந்த தசரத் மஞ்சி சாலை எங்க இருக்கு ? இந்த சாலையை யார் போட்டாங்க ? ஏன் போட்டாங்க ? எப்போ போட்டாங்க ? அதன் சிறப்பு என்ன ? ஆக இந்த தசரத் மஞ்சி சாலை பற்றிய கதைதான் இண்ணக்கி நான் சொல்லப்போற கதை

இந்த தசரத் மஞ்சி சாலைங்கறது கற்பனைக் கதை இல்லை உண்மையான கதை நிஜமான கதை.

தசரத் மஞ்சி என்ற ஒரு தனி மனிதனாக அவரோட சொந்த முயற்சியால 30 வருசம் உழைச்சி இரண்டு மலைகளுக்கு நடுவே உருவாக்கின சாலைதான் இந்த தசரத் மஞ்சி சாலை.

MOUNTAIN ROAD LOVE SYMBOL OF
DHASARATH MANJI & FALCUNI DEVI

இந்த தசரத் மஞ்சி சாலை கெஹலூர் என்ற ஊரில் இருக்கு. இதுக்கு பக்கத்துல இருக்கும் பெரிய ஊர் கயா. கயா பீஹார் மாநிலத்தில் இருக்கு

கெஹலூர் மலைகள் உயரமில்லாதவை. தொடராக இருக்கும். கூர்மையான கடினமான பாறைகள் நிறைந்த மலைத்தொடர் இது. இந்த மலைத் தொடரின் இரண்டு பக்கங்களிலும் சிறுசிறு கிராமங்கள் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு மலைக் கிராமத்தில்தான் வசித்து வந்தார் நம்மாள் தஷ்ரத் மஞ்சி.

தஷ்ரத் மஞ்சி அவர்கள் தான் தனிமனிதனாக நின்று இந்த சாலையை போட்டார் என்று பார்த்தோம்.

TAJMAHAL LOVE SYMBOL OF
SHAJAHAN & MUMTAJ

இந்த கிராமத்து மக்கள் வயலுக்கு போக வேண்டும்.  குழந்தைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும்.  பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமணை போக வேண்டும். எல்லாத்துக்கும்  ஆபத்தான இந்த மலைகளில் ஏறி குறுக்காக நடந்துதான் அடுத்த நகரத்துக்கு போகணும்.

அப்போ கூர்மையான செங்குத்தான பாறைகள் ஊடாக நடந்து போகணும். அப்பொ அடிக்கடி அவர்கள் விபத்துக்கு உள்ளாவது வழக்கம்

தஷ்ரத் மஞ்சி இந்த கிராமத்தின் தினக்கூலி.

ஒரு நாள் தஷ்ரத் மஞ்சியின் மனைவி இந்த மலைகளின் ஊடாக நடந்து போனார். அந்தமாதிரி  ஒரு பெரிய பள்ளத்துல விழுந்து ரொம்ப அடிபட்டது.

DHSARATH MANJI ROAD ENTRY GATE

எவ்வளவோ சிகிச்சை குடுத்தாங்க. அப்படியும் அவுங்க ஒரு நாள் அவர் இறந்து போனாங்க. 1960 ம் ஆண்டு அவர் இறந்தாங்க.

அவரது மனைவியின் இழப்பு அவரை பெகுவாக பாதிச்சது. இனி இந்த கிராமத்தில் இப்படி ஒரு விபத்து நடக்க நான் விடமாட்டேன், என்று முடிவு செய்தார்.

தனிமனிதனாக இதைச் செய்துமுடிக்க முடிவு செய்தார். அதற்குத் தேவையான சுத்தி, சம்மட்டி, கடப்பாரை, மண்வெட்டி மாதிரி சாதாரண கருவிகளோட களத்தில் இறங்கினார். தனது 3 ஆடுகளை விற்று இவற்றை வாங்கினார்.

செங்குத்தாக உயரமாக விரைப்புடன் நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவே தனது சாலையை அமைக்கத் தொடங்கினார்.

THE ROAD FORMED BETWEEN THE
TWO MOUNTAINS

ஆரம்பத்தில் கிராமத்தினர் கேலி பேசினர். இதெல்லாம் நடக்கற காரியமா ? அதுவும் ஒத்தை ஆளா இதெல்லாம் செய்ய முடியுமா ? என்று பேசினார்கள்.

இதை எல்லாம் தஷ்ரத் மஞ்சி காது கொடுத்து கேட்கவில்லை. எறும்புர கல் தேயும் என்பது போல தஷ்ரத் மஞ்சி செய்த வேலை பல ஆண்டுகள் தொடர்ந்ததால் அது பயன் அளிக்க ஆரம்பித்தது

ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல. தஷ்ரத் 22 ஆண்டுகள் போராடினார். அவருடைய உழைப்பைப் பாத்த பலரும் பாராட்டத் தொடங்கினார்கள்

இப்போது அவரது மலைமனிதன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இருபத்தியிரண்டு ஆண்டுகளில் 360 அடி சாலையை போட்டு இருந்தார். அதுவும் மலைகளுக்கு ஊடான மலை.  1982 ம் ஆண்டு தஷ்ரத் மஞ்சி இந்த சாதனையை செய்து முடித்திருந்தார்

இப்போது அந்த சாலை வழியாக மக்கள் போக ஆரம்பித்தனர் சிறுசிறு வாகனங்கள் கூட போக ஆரம்பித்தது

மலைமனிதன் என்று அழைக்கப்பட்ட அந்த மணிதன் 2007 ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

பகலில் பிறருடைய வயலில் உழவு செய்வார் அதிலிருந்து கிடைக்கும் சொற்பமான வருமானம் அவர் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்கும்.

மாலை நேரம் தொடங்கி இரவு நேரம் வரை மலைப்பாதை அமைப்பதில் ஈடுபடுவார்.

MOUNTAIN MAN DHSARATH MANJI AT WORK

அந்த சாலையின் அகலம் 30 அடி. உயரம் 25 அடி. நீளம் 360 அடியும் அமைந்தது. இந்த சாலை அமைந்ததனால் 70 கி.மீ என்பது ஒரு கிலோமீட்டராக சுருங்கியது. நினைத்துப்பாருங்கள்.

இது உண்மையாக நடந்த கதை. ஆச்சரியமாக இருக்கில்ல. இன்னொரு ஆச்சரியமான செய்தி சொல்றேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தா சினிமாக்காரங்க சும்மா விடுவாங்களா ? ஒரு சினிமா எடுத்து 2015 ம் ஆண்டு வெளியிட்டாங்க.

இந்த தசரத் மஞ்சியோட சொந்த ஊர் பேரு கெஹ்லார் கிராமம், அதுக்கு பக்கத்துல இருக்கற பெரிய ஊர் கயா. அது பீஹார் மானிலத்தில் இருக்கு.

"THE MOUNTAIN MAN"
BIOGRAPHICAL CINEMA OF
DHASARATH MANJI 2015

அந்த கெஹலார் கிராமம் இப்போ பீகார்ல ஒரு பெரிய சுற்றுலாத்தலமா மாறிடுத்து.

2016 ம் ஆண்டு தசரத் மஞ்சி’ க்காக இந்திய அரசாங்கம் ஒரு ஸ்டாம்பு வெளியிட்டிருக்காங்க.

தசரத் மஞ்சி அந்த சாலைபோட அவர் தனி மனிதனா வேலை செஞ்சது 22 வருஷம், 1960 ம் வருஷம் தொடங்கி  1982 ம் வருஷம் முடிஞ்சது.

அவர் இறந்தது, 2007 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி, பீஹார் அரசு மரியாதையோட அவர் உடலை அடக்கம் செய்தாங்க.

சாலை வசதி இல்லாததால தசரத் மஞ்சியோட ஃபல்குனிதேவி இறந்ததுதான் காரணம் அந்த சாலை அமைச்சதுக்குக் காரணம்.

மனைவி பேர்ல எவ்ளோ அன்பு வச்சிருக்கார் பாருங்க ! எல்லாருக்கும் ஷாஜகான் மும்தாஜ் தெரியும். அவ்ர்களோட காதல் அடையளம் தாஜ்மகால். தசரத் மஞ்சி ஃபல்குனி தேவியோட அடையாளம் தசரத்மஞ்சி சாலை.

உலகத்தின் பிரபலமான  காதலர்கள், ஷாஜஹான் மும்தாஜ், அம்பிகாபதி அமரவதி, சலிம் அனார்கலி, லைலா மஜ்னு, ஆன்ட்டனி கிளியோபாட்ரா, ஒதெல்லொ டெஸ்டிமோனா, ரோமியோ ஜுலியட், இந்த வரிசையில தசரத்மஞ்சி ஃபல்குனி தேவியோட பேரை சேர்க்கலாமா ? வேண்டாமா ? உங்க அபிப்ராயம் என்ன ?

பூமி ஞானசூரியன்


குற்றத்திலிருந்து கருணை வரை: ஷென்காயின் மீட்புப் பயணம் FROM CRIME TO COMPASSION: THE REDEMPTION STORY OF SHENCOY

#ShencoyStory #RealRedemption Story #IllegaiAffairCrime #MountainRoadBuilder #TRansformationStory #MasterAndDisciple #UnbeleivableRealStory #ReformedCriminal #YouthForgivenessStory

குற்றத்திலிருந்து கருணை வரை:

ஷென்காயின் 

மீட்புப் பயணம்

எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்தாலும் எவ்வளவு குரூரமான குற்றங்களைச் செய்தாலும்   அவுங்க திருந்த வாய்ப்பு உண்டு. அதைதான் மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். கொலை களவு காமம் இப்படி எல்லா மோசமான குற்றங்களையும் செய்த ஒருத்தரைபற்றிய கதைதான் இது. எனக்கு ரொம்பவும் பிடிச்சமான கதை.

ஒரு ஊர்ல ஒரு அரசாங்க அதிகாரி இருந்தார் அவர் பெயர் வென்காய், அவர்தான் இந்த கதையின் கதாநாயகன்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்மணியோட தகாத உறவு இருந்தது.

ஆனாலும் வென்காய் அடிப்படையில ஒரு நல்ல மணிதர் அப்படித்தான் எல்லாரும் சொல்லுவாங்க.

ஓரு நாள் அவரோட கெட்டகாலம், அந்த பெண்மணியோட கணவருக்கு இந்த தகாத உறவு தெரிஞ்சிடுத்து.

அதனால ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டாங்க அப்போ வென்காய் அடிச்ச அடியில் அந்த பெண்னோட கணவர் இறந்து போயிட்டார்.

அதுக்குப் பிறகு வென்காய்க்கு வேலை போயிடும்னு தெரியும். அவரை கைது பண்ணிடுவாங்க. ஜெயில்ல போட்டுவாங்க.

அது இல்லாம அவமானம். அதனால  வென்காயும் அந்த பெண்மனியும் சேர்ந்து தொலை தூரத்துல இருந்த ஒரு ஊருக்கு ஓடிப் போனாங்க.

கையில் இருந்த காசெல்லாம் செலவாயிடுத்து. அந்தப் பெண்மணி பொருப்பில்லாம நிறைய ஆடம்பரமா செலவு செய்யறவளா இருந்தா.

அதனால வேற வழி இல்லை. வென்காய் அந்தப் பெண்மணியை திருப்திப்படுத்த திருட ஆரம்பிச்சார்.

ஆனா அவருக்கு அதைத் தொடர்ச்சியா செய்ய விருப்பம் இல்லை. ஆனால் என்ன செய்யறதுன்னு யோசிச்சார். அந்தப் பெண்மணியோட ஒத்துப் போக முடியல.

ஒருநாள் ராத்திரியோட ராத்திரியா மறுபடியும் ஒரு மலைக்கிராமத்துக்கு அந்தம்மாகிட்டருந்து தப்பிச்சு ஓடிப் போனார்.

அந்த ஊர்ல ஒரு மருத்துவர்கிட்ட வேலை பார்த்தார். அந்த மருத்துவத்தை முழுசா கத்துகிட்டார் வென்காய். கொஞ்சம் நாள் அந்த மருத்துவர் இறந்து போனார்.

இப்போ அந்த ஊருக்கு இவர் மருத்துவரா ஆகிட்டார். இது வரைக்கும் தான் செய்த கெட்ட காரியங்களுக்கு பிராயசித்தம் செய்யனும்னு நினைச்சார்.

தன்னோட மருத்துத் தொழில் மூலமா எல்லாருக்கும் உதவி செஞ்சார். அந்த ஜனங்க மத்தியில் நல்ல பெயர் எடுத்தார்.

அந்த கிராமத்தை சுத்தி மலைகள் சூழ்ந்து இருந்தது. அவுங்க எங்க போகணும்னாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த மலையை ஏறித்தான் போகணும்.

எத்தனையோ முறை அரசாங்கத்தில் முறையிட்டும் எதுவும் நடக்கல

இப்போ அந்த மலையில் ஒரு  சுரங்கப்பாதை அமைச்சா ஜனங்க பிரச்சனை இல்லாம இருப்பாங்க.

விவசாயிகளுக்கு, வியாபாரிகளுக்கு, பள்ளிக்கூட குழந்தைகளுக்கு எல்லாருக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும்னு நினைச்சார் வென்காய்.

வென்காய் தனி ஆளாய் அந்த சுரங்கப் பாதையை வெட்ட ஆரம்பிச்சார். அவ்வளவு சீக்கிரம் முடியல. பல வருடங்கள் ஆச்சி. இப்பொ அந்த சுரங்கபாதை முடியும் தருவாயில் இருந்தது.

இத்தனை வருசம் அந்த மலையில் சுரங்கப்பாதை வெட்டினதுக்கு அரசாங்கமும் உதவல. அடுத்தவங்க யாரும் உதவி செய்யல.

அந்த சமயம் ஒரு இளைஞர் வென்காய் அவர்களைத் தேடிட்டு வந்தார்.

“வணக்கம் சார்.. நான் உங்களைப் பாக்கத்தான் வந்திருக்கேன். இத்தனை வருசமா உங்களத்தான் தேடிட்டு இருக்கேன். இப்பொதான் கண்டுபிடிச்சேன்” என்றான் அந்த இளைஞன்.

“நான் ஏதாச்சும் உங்களுக்கு உதவி செய்யணுமா சொல்லுங்க, என்னால் முடிஞ்ச உதவியா இருந்தா கண்டிப்பாய் செய்யறேன்” அப்படின்னார் வென்காய்.

“கண்டிப்பாக உங்களால் முடியும். அந்த உதவி என்னான்னு சொல்லறதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லணும். சரியா 20 வருசத்துக்கு முன்னாடி நீங்க ஒருத்தரை கொலை பண்ணிட்டு ஒடி வந்துட்டிங்க. உங்களால கொலை செய்யப்பட்டவரோட மகன்தான் நான். அந்த கணக்கு தீக்கறதுக்காத்தான் வந்திருக்கேன்”

“கடைசி காலத்துல மனநிலை பாதிக்கப்பட்டு எங்க அம்மாவும் இறந்து போனாங்க. அவங்களோட ஈமக்கிரியை முடிச்சிட்டுத்தான் நான் வர்றேன். உங்களைக் கொன்று பழிதீர்க்கறதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன்”ஏன்று தீர்மானமாகச் சொன்னான் அந்த இளைஞன்.

“நான் செய்தது மிகப் பெரிய பாவம். அந்தப் பாவத்தைக் கழுவத்தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உன் விருப்பம் எதுவோ செய்ய எனக்கு முழு சம்மதம். ஆனா இப்போ  மலைகளுக்கு நடுவால சாலை அமைக்கும் வேலையை  நான் செஞ்சிட்டு இருக்கேன்"

“இந்த சுரங்கப்பாதை அமைச்சா பள்ளிக் குழந்தைகள் நிறைய படிப்பாங்க விவசாயிகள் உணவு தானியங்களை விற்பனை செய்ய உதவியா இருக்கும்”

“உடல் நலம் குண்றியவர்கள் மருத்துவ மனைகளுக்குப் போக உதவியா இருக்கும்”

“பிரசவ காலத்தில் பெண்கள் அதிகம் கஷ்டப்படமாட்டாங்க”.

“மழைக்காலத்துல ஏற்படக்கூடிய நிலச்சரிவுல வருசாவருசம் ஓருத்தர் ரெண்டுபேருன்னு சாகறதை தடுக்க முடியும்.”

“வெளியூர் பயணம் போறவங்க உயரமான மலைகளின் மீது ஏறவேண்டாம், இறங்க வேண்டாம்.”

“நீ என்ன சொன்னலும் நான் அதுக்கு ஒத்துக்கிறேன். அந்த தண்டனைக்கு நான் தயார். ஆனா நான் முக்கியமான பொதுக்காரியத்த செஞ்சிட்டு இருக்கேன். அது எனக்காக இல்ல ஒட்டு மொத்தமா இங்க வசிக்கிற ஜனங்க எல்லாத்துக்கும். அந்த வேலையை செய்து முடிக்க என்ன அனுமதிக்கனும். இன்னும் கொஞ்ச வேலைதான் இருக்கு. அது முடிஞ்ச அடுத்த நொடியே என்னை  நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். உங்க விருப்பத்தை நீங்க நிறைவேற்றலாம்” அப்படின்னு அந்த இளைஞன் கிட்ட அவகாசம் கேட்டு  வென்காய் கெஞ்சினார்.

அவர் கேட்டுக்கொண்டது நியாயமாகப் பட்டது அவனுக்கு. அவர் கேட்டுக்கொண்டதற்கு அந்த இளைஞன் “சரி” என்றான்.

ஆதன் பிறகு பல மாதங்கள் போனது. தினம் தினம் அவர் செய்யும் வேலைகளை போய்ப் பார்ப்பான்.

எத்தனை நாளைக்குதான் அந்த இளைஞன் வெறுமனே ஒரு பார்வையாளனாக வந்து பொவான். வென்காய் ஒரு தனி மனிதனாக செய்யும் சேவை. அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் அவனும் அதற்கு உதவி செய்யலாமா என்று யோசித்தான்

அப்படியே, அந்த இளைஞனும் வென்காயோடு சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினான்.

ஒரு ஆண்டு முடிஞ்சது, அந்த இளைஞன் வென்காயைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டான்

“இப்போ சுரங்கப்பாதை வேலை முடிஞ்சது. இப்போ நீங்க கேட்ட மாதிரி என்னை பழிவாங்கலாம். நான் என்னைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றார் வென்காய்

"என்னுடைய ஆசானை எப்படி என்னால் கொல்ல முடியும் ? எனது வாழ்க்கையின் வழிகாட்டியை எப்படி தான் கொல்ல முடியும் ?"

இதைக்கேட்டதும் வெங்காய் மிரண்டு போனார், “நீ என்ன சொன்னாய்”  என்று ஆச்சரியமாகக் கேட்டார் வென்காய்

"இப்போது நான் உங்கள் மாணவன். இன்று நீங்கள் எனது குரு. எனது ஆசான். என் ஆசானை எப்படி என்னால் கொல்ல முடியும் ?"  என்று சொன்னான் அந்த இளைஞன். அதைக் கேட்ட ஷென்காயின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. அப்போது இளைஞன் வென்காயின் கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு அவரை இறுகத் தழுவினான்.

அந்த அழுத்ததில் அவன் அன்பின் ஆழம் புரிந்தது வென்காய் தேம்பித்தேம்பி அழுதார்.

அந்த இளைஞன் அவர் கண்களை ஆதுரமாகத் துடைத்து விட்டான்.

எவ்வளவு கொடூரமான மனிதனும் மனம் மாறினா திருந்தி வாழ முடியும் அதுக்கு ஷென்காய் ஒரு நல்ல உதாரணம். ஆனா ஷென்காய் மாதிரி தலைகீழா மாற முடியுமா ? நீங்க என்ன நினைக்கிறிங்க ?

அந்த இளைஞனா நீங்க இருந்தா என்ன பண்ணி இருப்பிங்க ?  மன்னிப்பிங்களா ? மாட்டிங்களா ? கமெண்ட் பகுதியில் ஒரு வரி எழுதுங்கள்.

பூமி ஞானசூரியன்

மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

  PHYLLOSTACHYS NIGRA கருப்புமூங்கில் மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO “மூங்...