சிக்கிம்’ல் 100 சத
இயற்கை விவசாயம் எப்படி ?
HOW 100 % ORGANIC FARMING IN SIKKIM ?
#HOW100%ORGANICFARMINGINSIKKIM #சிக்கிம்’ல்100சதஇயற்கைவிவசாயம்எப்படி
#WHATISORGANICFARMING #SAFEFOOD #NOFERTILIZER #NOPESTICIDE #HEALTHYFOODPRODUCTION #NODISEASE #PROTECTIVEFOOD #ORGANICCARDOMOMGINGER
இந்தியாவில் 100 சதவிகிதம் இயற்கை விவசாயம் செய்யும் மாநிலம் இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது. சிக்கிம் மாநிலம் தான் இந்தியாவில் 100 சதம் ராசயன உரம் போடாமல் ராசயன பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்கை விவசாயம் செய்கிறது.
2016 ம் ஆண்டு முதன் முதலாக சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயம் செய்யும் மாநிலம் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் சிக்கிம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் அத்தனைக்கும் பாதுகாப்பான உணவு என்ற உத்தரவாதத்தை அளிக்கலாம்.
சிக்கிம் மாநிலத்து விவசாயம் மனிதர்களுக்கும் பாதுகாப்பானது, அந்தப் பகுதியின் சுற்றுச்சுழலுக்கும் பாதுகாப்பானது. அந்த மாநிலம் முழுக்க ஒரே ஒரு மண். ஒருதுளி ராசயன உரமோ, ஒரே ஒரு துளி பூச்சிக்கொல்லி மருந்தோ பயன்படுத்துவதில்லை.
1.சிக்கிமில் இயற்கை விவசாயம்
2003 ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தவர் இயற்கை விவசாயம் செய்வது என முடிவெடுத்தார்கள்.
2003 ம் ஆண்டில் இந்தியாவிலேயே மிகவும் குறைவான அளவு ரசாயன உரம் பயன்படுத்திய மாநிலமாக இருந்தது. சிக்கிம் தான். ஒரு எக்டரில் அவர்கள் 2.8 கிலோ ரசாயன உரம்தான் பயன்படுத்தினார்கள்.
பாரம்பரியமாக சிக்கிம் மாநிலத்தில் ரசாயன உரம் பயன்படுத்துவதும். வழக்கத்தில் இல்லை. இயற்கையான உரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள்.
2.
இயற்கை விவசாயத்தில் இருபயிர்கள்
சிக்கிம் மாநிலத்தின் முக்கியமான பயிர் ஏலக்காய். ஏலக்காய் மிகையாக மதிப்பு உள்ள பயிர் அது ஒரு பணப்பயிரும் கூட.
ஏலக்காய்க்கு அடுத்ததாக அவர்கள் சாகுபடி செய்வது இன்னொரு பணப்பயிர் இஞ்சி. இஞ்சியும் ஒரு பணப்பயிர் இரண்டுமே நல்ல வருமானம் தரக்கூடிய பயிர்.
இயல்பாகவே சிக்கிம் வளமான பூமியாக இருந்தது, ஊட்டச்சத்துகள் நிறைந்த பூமியாக இருந்தது.
3.சிக்கிம்
அரசின் பங்கு
அதனால் சுலபமாக அரசு முழுமையாக சிக்கிம் விவசாயத்தை இயற்கை விவசாயமாக மற்றுவது என முடிவெடுத்தது.
முழுமையாக இயற்கை விவசாயம் என்று முடிவெடுத்ததும் முதல் காரியமாக 2003 ம் ஆண்டு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான மானியத்தை 10 சதமாக அரசாங்கம் குறைத்தது. 2014 ம் ஆண்டு இந்த மானியத்தை முழுமையாக ரத்து செய்தது.
அந்த சமயம் அதாவது 2014 ம் ஆண்டு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதும் விற்பனை செய்வதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.
4.சட்டத்தை மீறினால் தண்டனை
சட்டத்தை மீறி ரசாயன உரம் அல்லது பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துபவர்களுக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை, அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும், சிலசமயம் இரண்டையும் செலுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்தபோது சிக்கிம் மாநிலத்து விவசாயிகளில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தொடர்ந்து தந்த பயற்சி அவர்களின் மனநிலையை மாற்றியது என்கிறார் சிக்கிம் ஆர்கானிக் மிஷனின் கூடுதல் இயக்குநர் எம்.கே.பிரதான் அவர்கள்.
2013 ம் ஆண்டிலிருந்து 2018 ம் ஆண்டு வரையான ஐந்து ஆண்டுகளில் 6526 கம்போஸ்ட் பீட் என்னும் குப்பைக்குழிகள் மற்றும் மண்புழு உரத்திடல் அமைப்பதற்கு 3877 குழிகளும் எடுத்துத் தரப்பட்டது.
இந்த உரக்குழிகளில் தயாரிக்கப்பட்ட உரங்களை குழிகள் இல்லாத விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த உரக்குழிகள் அனைத்தும் விவசாயிகளின் வயல்களிலேயே அமைக்கப்பட்டன.
5.இயற்கை
உரம் தயாரிக்கும் முறைகள்
இந்த உரக்குழிகளில் இயற்கை உரங்களை தயாரிக்கும் வழிமுறைகளும் பயன்படுத்தும் முறைகளும் விவசாயகளுக்கு விளக்கமாக சொல்லித் தரப்பட்டது என்கிறார் செயல் இயக்குநர் எஸ்.அன்பழகன் அவர்கள்.
சிக்கிம் ஆர்கானிக் மிஷன், தோட்டக்கலைத் துறை, வேளாண்மை அறிவியல் மையம், ஆத்மா திட்டம் மற்றும் இண்டியன் கஷன்சில் ஆப் ஆக்ரிகல்சுரல் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகளைத் தந்தார்கள்.
6.
மானியம் தர வேண்டும்
ரசாயன உரங்களை மானிய விலையில் அளித்தது போல இயற்கை உரங்களை வாங்கவோ உற்பத்தி செய்யவோ அரசு மானியம் எதுவும் தந்ததாகத் தெரியவில்லை.
2010 முதல் 2014 வரையான காலகட்டங்களில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 5 சதம் மட்டுமே பயன்படுத்தபட்டது என்கிறார்கள்.
இந்தப்
பதிவு இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும், செய்யத் தொடங்கும் விவசாயிகளுக்கும்
மிகவும் உதவியாக இருக்கும். இந்த வலைத்தளத்தின் பின்தொடர்பவராக பதிவு செய்துகொள்ளுங்கள்.
பூமி
ஞானசூரியன்.
No comments:
Post a Comment