Tuesday, June 10, 2025

தமிழ்நாட்டின் உணவு எண்ணெய் வகைகள் EDIBLE OILS OF TAMILNADU

 

தமிழ்நாட்டின் உணவு எண்ணெய் வகைகள்

EDIBLE OILS OF TAMILNADU

#EDIBLEOILSOFTAMINADU #GROUNDNUTOIL #GUNEGELYOIL #COCONUTOIL #SUNFLOWEROIL #OLIVEOIL #MUSTARDOIL #SOYABEANOIL #SALOIL #RICEBRANOIL #GNANASURIABAHAVANACADEMY

தமிழ்நாட்டின் உணவு எண்ணெய் வகைகள் பற்றி இந்தப்பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.   கடலை எண்ணெய்

Groundnut Oil with Kernals

2.   நல்லெண்ணெய்

3.   தெங்காயெண்ணெய்

4.   சனோலா சூரிய காந்தி எண்ணெய்

5.    பால்ம் ஆயில் எண்ணெய்

6.   கடுகு எண்ணெய்

பீநட் அலர்ஜி என்பது நிலக்கடலை சம்மந்தப்பட்ட பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமைக்கு பெயர் பீநட் அலர்ஜி என்பது தற்போது ரிஃபைண்டு ஆயில் என்ற பெயரில் வரும் எண்ணெயில் அலர்ஜிக்கான பொருட்கள்  நீக்கப்படுகிறது.

இந்தியா உட்பட தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் சீனாவில் அதிகமாக கடலை எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் தாவர எண்ணெய் வகைகளில் அதிகமான ஸ்மோக் பாயிண்ட் உடையது. இதனால் சமையலில் பொறிப்பது, மற்றும் வறுப்பதற்கு மிகவும் பொருத்தமான எண்ணெய் இது.

1.கடலை எண்ணெய்

Groundnut Oil with Pods & Kernals

தமிழ்நாட்டில் சூரியகாந்தி எண்ணெய் அறிமுகம் ஆவதற்கு முன்னால் தமிழ்நாட்டின் சமையலில் அதிகம் கடலை எண்ணெய்தான் பயன்படுத்தப்பட்டது.

இந்த எண்ணெய்க்கான தனியான ஒரு மணம் இருக்கும். அமெரிக்கா, சைனா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய, நாடுகளில் பயன்படுத்தும் எண்ணெய் வேறு. எண்ணெய்களுக்கு தட்டுப்பாடு வந்த சமயம் அமெரிக்காவில் கை கொடுத்தது கடலை எண்ணெய்தான்.

சோப்பு செய்ய, மற்றும் மசாஜ், பயோடீசல் செய்ய பயன்படுத்தலாம். கடலை எண்ணெயில் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. வைட்டமின் அதிகம் உள்ளது கொலஸ்ட்ரால் ஏதும் இல்லை. 100 கிராம் எண்ணெயில் 48.3 கிராம் மானோ சேச்சுரேட்டட் ஃபேட் 33.4 கிராம், பாலி அன்சேச்சுரேட்டட் ஃபேட்டும் அடங்கி யுள்ளது. கெட்ட கொழுப்பு எனும் சேச்சுரேட்டட் ஃபேட் 17.7 கிராம் மட்டும் உள்ளது.

பீநட் அலர்ஜி என்பது ஒரு சிலருக்கு அரிதாக இருக்கும். அவர்கள் வேறு எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

பலவீனமான தலைமுடியின் மயிர்க்கால்களை பலப்படுத்தி  முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது, இதில் இருக்கும் வைட்டமின் இ’ சத்து.

கடலை எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து விடுவதால் தலையில் இருக்கும் பொடுகு குணம் ஆகும்.

தலை முடிகள் உதிர்ந்து போதல் அல்லது உடைந்து போதல் ஆகியவற்றைத் தடுத்து புதிய முடிகள் வளர உதவுகிறது. இதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள்.

இதில் வைட்டமின் இ’ யும் தாவர ரசாயனங்கள் எனும் பைட்ரோ கெமிகல் களும் நிறைந்துள்ளன. இதைதான் நாம் இயற்கையான ஆண்டி ஆக்சிடென்டுகள் என்கிறோம். அதனால் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை கட்டுப்படுத்தும், தடுக்கும் சக்தி கொண்டது.

வைட்டமின் இ’ இருப்பதால் அது உடலை உற்சாகம் குன்றாமல் இளமையாக வைத்துக்கொள்ளும். சருமத்தை சுருக்கமில்லாமல் பளபளப்பாக மினுமினுப்பாக பராமரிக்கும்.

2.நல்லெண்ணெய்

எள்ளில் இருந்து எடுக்கும் எண்ணெய்தான் எள்ளெண்ணை, அல்லது நல்லெண்ணை, தமிழ் நாட்டில் மூன்றுவகை எண்ணெய்களைப் பயன்படுத்துவார்கள். அதிகம் சமையலுக்கு பயன்படுத்துவது கடலை என்ணெய்.

சிலர் எள் எண்ணெயை அதிகம் சமையலில் பயன்படுத்துவார்கள். தலையில் தேய்த்து தலை குளிப்பது தமிழ் நாட்டில் வழக்கமாக இருந்தது. சனிக்கிழமையானால் எங்கள் வீட்டில் நல்லெணையில் தலை குளிப்போம். தலை வாறுவதற்கு, ஆண்கள் நல்லெண்ணையையும், பெண்கள் தேங்காய் எண்ணையையும் பயன்படுத்துவார்கள்.. பெண்கள் அதிகம் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள்.

கொழுப்பைப் பொருத்த வரை 100 கிராம் எண்ணெயில் மானோ சேச்சுரேட்டட் கொழுப்பு (நல்லது) 39-700 கிராமும், பாலி அன் சேச்சுரேட்டட் கொழுப்பு (நல்லது) 41.700 கிராமும், சேச்சுரேட்டட் எனும் கெட்ட கொழுப்பு 14.200 கிராமும் இருக்கிறது. வைட்டமின்கள் இ’ மற்றும் கே’ இதில் அடங்கி உள்ளன.

உடம்பில் நல்லேண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது சுவாரஸ்யமான விஷயம். எண்ணெய் தேய்ப்பதில் சிலர் எக்ஸ்பெர்ட் களாக இருப்பார்கள். பெரும் பணக்காரர்கள் அவர்களிடம் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவார்கள் அப்படி எண்ணெய் தேய்ப்பதே ஒரு வீர விளையாட்டு போல இருக்கும்.

3.தேங்காய் எண்ணெய்

தமிழ் நாட்டில் பெண்கள் தலையில் தேய்க்க அதிகம் பயன்படுத்துவார்கள். சமையலுக்கு பயன்படுத்துவதில்லை இது பொம்பள எண்ணெய்’ எனக்கு வேண்டாம் என்று  நான் சின்ன வயதில் சொல்வேனாம். என அம்மா அடிக்கடி சொல்லுவார்.

தமிழ் நாட்டில் தேங்காய் எண்ணெயை கிராமங்களில் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. பொதுவாக பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில்தான் தேங்காய் எண்ணெய் வாங்குவார்கள். பொதுவாக எல்லா வீடுகளிலும் சமைக்க கடலை எண்ணெய், வேறு காரியங்களுக்கு நல்ல எண்ணெய், ஆகியவற்றை கைவைத்தியங்களிலும் இதனைப் பயன்படுத்துவார்கள்.

கேரளாவில் எல்லாவற்றிற்கும் தேங்காய் எண்ணெய்தான். தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் தான் கேரளப் பெண்கள் அழகாய் இருக்கிறார்கள் என்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்.

தேங்காய் எண்ணெயில் செய்யப்படும் பலகாரங்கள் அரியதாய் எங்கள் வீட்டிற்கு வரும். என்னைத் தேங்காய் எண்ணெயில்தான் செய்தார்கள்’ என்று சொல்லும்படியாக இருக்கும் அந்த பலகாரங்களின் மணம்.

தேங்காய் எண்ணெயை குழைந்து கைகால்களில் பூசிக்கொள்ள சுகமாய் இருக்கும். சிறிது நேரம் வரை அந்த மணம் புத்துணர்ச்சித் தருவதாய் இருக்கும்.

நல்லெண்ணெயிலும் மெலிகான ஒரு மணம் வீசும். நல்லெண்ணெயில் செய்த பலகாரங்கள் கூட அது எள்ளெண்ணெயில் செய்தது என்பதைச் சொல்லும்.

‘அதிகமான அளவு சேச்சுரேட்டட் ஃபேட் இருக்கறதால தேங்காய் எண்ணெயில சமையல் செய்யாதிங்க.. குறைச்சலா உபயோகப்படுத்துங்க என்று சொல்லுகிறது வேர்ல்ட் ஹெலத் ஆர்கனைசேஷன்’.

நூறு கிராம் எண்ணெயில் சேச்சுரேட்டட் ஃபேட் எனும் கெட்ட கொழுப்பு 87 கிராம் உள்ளது. தினசரி நமக்கு தேவைப்படும் கொழுப்பைவிட 435 சதவிகிதம் அதிகம் உள்ளது. என்று சொல்லுகிறார்கள் நிபுணர்கள். வைட்டமின்கள், தாது உப்புக்கள் வேறு எதுவும் இல்லை.

4.சூரிய காந்தி எண்ணெய்

1970 ம் ஆண்டுகளுக்கு பின்னால் தமிழ்நாட்டில் சூரிய காந்தியை அறிமுகம் செய்தார்கள். அந்த சமயம் அது சம்மந்தமான திட்டத்தில் நான் வேலை பார்த்தேன் சூரியகாந்தி சாகுபடி பற்றிய பயிற்சி எல்லாம் எங்களுக்குக் கொடுத்தார்கள். நாங்கள் அதனை விவசாயிகளுக்கு கொடுத்தோம். முதன் முதலாக தர்மபுரி மாவட்டத்தில் தான் சூரிய காந்தி எண்ணெய் பிழியும் ஆலை தொடங்கினார்கள். அந்த விழாவில் கூட நான் கலந்து கொண்டதாக ஞாபகம்.

சூரிய காந்தி எண்ணெய் வந்த பிறகு அதற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்தது. இதய நோய் வராது என்று சொல்லித்தான் விளம்பரம் செய்தார்கள். இதய் நோய் மற்றும் ஹார்ட் அட்டாக்’ பற்றி பொது மக்கள் அப்போது தான் தெரிந்து கொண்டார்கள்.

மாத சம்பளம் வங்குபவர்கள் எல்லாம் உடனே சூரிய காந்தி எண்ணெய்க்குத் தாவினார்கள் கடலை விவசாயிகள் இன்னும் கூட யாரும் கடலையை விட்டு போகவில்லை.

அந்த சமயம் இரண்டு பயிர்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தார்கள் ஒன்று சூரிய காந்தி இன்னொன்று மக்காச்சோளம்.

சூரிய காந்தி எண்ணெய் இந்திய சமையல் கூடங்களில் நுழைந்த சமயம் பாரம்பரியமான எண்ணெய் வகைகள் எல்லாம் பின்கட்டுக்குப் போனது. இயற்கை விவசாயம் பேச ஆரம்பித்தப் பின்னால்தான் மறுபடியும் கடலை எண்ணெய், நல்லெண்ணை ஆகியவற்றிற்கு கொஞ்சம் சூடு பிடித்துள்ளது.

மலிவாக இருக்கிறது என்பதற்காக இறக்குமதி செய்த பாமாயில் வந்து ரேசன் கடைகளில் நுழைந்ததும், தமிழ் நாட்டு சமையல் எண்ணெய்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்து போனது.

அதுபோல அரசு எதிர்பார்த்த அளவுக்கு சூரிய காந்தி பயிரும் பரவலாக பரவவில்லை, கரிசல்காடுகளில் மட்டுமே தளை கட்டியது. மற்ற இடங்களில் எல்லாம் தளை தட்டியது.

சூரிய காந்தியில் சேச்சுரேட்டட் ஃபேட் என்னும் கரையும் கொழுப்பு 9.748 கிராமும், மானோ சேச்சுரேட்டட் பேட் 83.594 கிராமும், பாலி சேச்சுரேட்டட் பேட் 3.798 கிராமும், அடங்கியுள்ளன. இவை தவிர வைட்டமின் இ’ மற்றும் கே’ வும் அடங்கியுள்ளன.

குறிப்பு: சூரிய காந்தியின் ரகங்களுக்கு ஏற்ப இந்த கொழுப்பின் அளவு கூடக்குறைய இருக்கும்.

சூரிய காந்தி எண்ணெயை டீசலுடன் கலந்து கார்கள் மற்றும் இதர எஞ்சின்களை ஒட்டப் பயன்படுத்தலாம்.

5.பால்ம் ஆயில்

பால்ம் ஆயில் பனையை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர பகீரகப் பிரயத்தனம் செய்தார்கள். அது ரேசன் கடையோடு நின்று போனது. மழை என்று சொல்ல வாயைத்திறந்தால் வாய் ரொம்பி விடணும். அந்த அளவுக்கு மழை இருந்தால் அங்குதான் இந்த பாமாயில் பனை வளரும்.

உலகம் முழுவது பாமாயில் பயன்படுத்துவது மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு  நபர் ஒர் ஆண்டில் பாமாயில் பயன்படுத்துவது 7.7 கிலோவாக இருந்தது. 2015 ம் ஆண்டில் அகில உலக அளவில் பயன்படுத்தும் அளவாக இருந்தது இது.

பாமாயிலைத் தொடர்ந்து பயன்படுத்துவது இதயத்திற்கு பாதுகாப்பானதல்ல. இதில் கொழுப்புச்சத்து என்று சொல்லப்படும் கெட்ட கொழுப்பு, சேச்சுரேட்டட் பேட்டி ஆசிட் 49.3 சதம் உள்ளது. மானோ சேச்சுரேட்டட் பேட்டி ஆசிட் 37.00 சதம் உள்ளது பாலி அன்சேச்சுரேட்டட் பேட்டி ஆசிட் 9.3 சதம் உள்ளது.

6.கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை கடுகு எண்ணெய் என்கிறோம்.

கடுகு எண்ணெய் பாரம்பரியமாக இந்தியாவில் சமையலுக்காக பயன்படுத்தி வரும் எண்ணெய்.

வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கடுகு எண்ணை இல்லாமல் வசிக்கவே முடியாது என்கிறார்கள்.

கடுகு எண்ணெய் பயன்படுத்துவோருக்கு ஜலதோஷம் சளி ஜுரம் வராது என்கிறார்கள்.

கடுகு எண்ணெய் பயன்படுத்துவோருக்கு தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நமது உடலில் சருமப் பாதுகாப்பு மற்றும் அதன் ஊட்டத்திற்கு சிறந்தது.

குளிர்பருவத்தில் குழந்தைகளின் உடலில் கடுகு எண்ணெயைப் பூசி மசாஜ் செய்து வெயில் குளியல் எடுக்க வைப்பார்கள். இதனால் வைட்டமின் டி’ கிடைக்கும். இது எலும்பு வளர்ச்சிக்கு உதவும் பல், வாய் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும் இது உதவியாக இருக்கும்.

மூன்று பங்கு பாலி அன் சேச்சுரேட்டட் பேட்டி ஆசிட்’டும் ஒரு பங்கு சேச்சுரேட்டட் பேட்டி ஆசிட்டும் தேவை என்கிறார்கள். மருத்துவ நிபுணர்கள். கடுகு எண்ணெயில் இருப்பது முழுவதுமாக மானோசேச்சுரேட்டட் பேட்டி ஆசிட்ஸ்.

இதில் போதுமான அளவு மோனோ சேச்சுரேட்டட் பேட்டி ஆசிட்ஸ் இருப்பதால் இது இதயத்திற்கு பாதுகாப்பானது. இது நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

இதில் கணிசமாக இருக்கும் ஆல்பா லினோலிக் ஆசிட் இருப்பதால் இது இலிமிக் எனும் இதய நோய் வரவிடாமல் தடுக்கிறது. இந்த வகையில் இது சூரியகாந்தி எண்ணெயவிட சிறந்தது.

உங்கள் குதிகால் வெடிப்பு இருந்தால் கவலைப்பட வேண்டாம் கொஞ்சம் கடுகு எண்ணெயுடன் மெழுகுவர்த்தியின் மெழுகினை சமமான அளவு எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை எடுத்து கால்பாதங்களின் விளிம்புகளில் தடவ குதிகாலில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்தும்.

நமது உடலில் வெளியே மற்றும் உட்புறங்களில் கடுகு எண்ணெய் கிருமிகளினால் ஏற்படும் தாக்குதலைத் தடுக்கிறது. பாக்டீரியா வைரஸ் மற்றும் பூசணங்களுக்கு எதிராக செயல்படும் பண்பினைக் கொண்டது கடுகு எண்ணெய்.

கடுகு எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்வதன் மூலம் தோலில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் வெடிப்புகளை மறையச் செய்யும் இளமையைப் பாதுகாக்கும். காரணம் இதில் வைட்டமின் போதுமான அளவில் உள்ளது.

கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயும் சேர்த்து மசாஜ் செய்ய தோலில் ஏற்படும். கரும்புள்ளிகள், தேமல், போன்றவை மறைந்து முகத்திற்கு பொலிவு தரும்.

பூமி ஞானசூரியன்

 

 

 

 

 

No comments:

மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

  PHYLLOSTACHYS NIGRA கருப்புமூங்கில் மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO “மூங்...