வரப்பை ஏத்திப் போடுங்க
FIELD BUNDS IN THE SHIELD OF FARMING
#Agriculture
#SoilConservation #WaterConservation #ControlSoilErosion #IncreasedProductivity
#ControlNutritionLoss #IncreasedIncome #IncreasedProfit
மண் வரப்பு விவசாயத்தின்
பாதுகாப்பு கவசம்
அன்பிற்குரிய பூமி யூடியூப் சேனல்
சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்
1.மண் வரப்பின் முக்கியத்துவம் IMPORTANCE OF EARTHEN BUNDS
இன்றைய நமது நிகழ்ச்சியில் மழைக்கால அவசரங்கள் தலைப்பில் மண்வரப்பு பாதுகாப்பு என்பது பற்றி பார்க்கலாம். இதில் நமது வயலில், நிலத்தில் உள்ள வரப்புகளை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது, மேம்படுத்துவது என்று பார்க்கலாம்.
2.தென்மேற்குப் பருவமழை SOUTHWEST MONSOON
தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாகவும், பலமாகவும் பெய்து கொண்டிருக்கிறது. பல மாவட்டங்களில் இயல்பு மழையவிட அதிகமாக பெய்து வருவதாக பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில், செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
பருவமழைகள் மூலமாக ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சராசரியாக 945 முதல் 955 மி.மீ வரை மழை கிடைக்கிறது. இந்த மழையில் கிடைக்கும் நீரில் சுமார் 17..5 சதம் ஒடுநீர் என்று சொல்லும்படியாக வீணாகப் போகிறது. இன்னொரு 17..5 சதம் ஆவியாகப் போகிறது.
இதில் 10.75 சதம் நிலத்தடி நீராக சேகரம் ஆகிறது. நாம் பயன்படுத்தும் நீரின் அளவு வெறும் 7..5 சதம் மட்டுமே இதில் 46.25 சதவிகிதம் கடலில் போய் கலக்கிறது. மீதம் உள்ளது வேறு வகைகளில் வீணாகிறது என்று சொல்லுகிறார்கள் நிபுணர்கள்.
3.மழைக்காலத்தில்
ஏற்படும் பாதிப்புகள்
நம்முடைய இந்த நிகழ்ச்சியில் இந்த மழைக்காலத்தில் என்ன செய்தால் நமது நிலத்தில் உள்ள மண் வரப்புகள் மூலம் இந்த மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை அதிகரிப்பதோடு மண் அரிப்பையும் கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நமது நிலத்தில் ஏற்கனவே நாம் அமைத்திருக்கும் மண் வரப்புகளை நாம் பாதுகாக்க வேண்டும். பராமரிக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும், இதனால் மழைநீரை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த நீரை நிலத்துக்கு அடியில் நிலத்தடி நீராக சேமிக்கலாம்.
மண் வரப்புகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும். பராமரிக்க என்ன செய்ய வேண்டும். மேம்படுத்த என்ன செய்ய வேண்டும். என பார்க்கலாம்.
4.பாதுகாப்பு CONSERVATION
நம் நிலத்தில் இருக்கும் மண் வரப்புகள் பெருமழை காலத்தில் ஒடுநீரால் உடையாமல் பாதுகாக்க வேண்டும்.
5.பராமரிப்பு
MAINTENANCE
உடைந்து போகாமலும், மண் வரப்புகள் சேதம் அடையாமலும், தொடர்ந்து பார்த்துக் கொள்ளுவது அவற்றைப் பழுது பார்ப்பதும்தான் பராமரிப்பு.
6.மேம்படுத்துதல்
DEVELOPMENT
முன்பு இருப்பதைவிட சிறப்பாக அது அதன் வேலையைச் செய்ய சில ஆக்கப்பூர்வமான மறுதல்களைச் செய்வது தான் மேம்படுத்துதல் அதற்கு மூன்று உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.
ஒன்று சுற்று வரப்புகளில் புல்பத்தைகளைப் போட்டு வளர்ப்பது. குதிரை மசால் மற்றும் வேலி மசால் போன்றவற்றை வளர்ப்பது. இதனால் மழைக்காலங்களில் எளிதாக வரப்புகள் கரைந்து போகாது. செடிகளின் வேர்கள் மண்ணை கெட்டியாக பிடிச்சிக்கும். அரிமானம் ஆக அனுமதிக்காது இது வரப்புகளின் தரத்தை மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்தும்.
வரப்புகளில் வெளிப்புற வழிகள் அமைப்பது உங்கள் நிலத்தின் உள் வரப்புகளிலும், வெளி வரப்புகளிலும், குழாய்களைப் பொருத்துவதன் மூலம் அதிகப்படியான தண்ணீரை வடித்து விட முடியும். தண்ணீர் குறைவாக இருந்தால் நிலத்திலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். இதுவும் வரப்புகளின் தரத்தையும் பயன்பாட்டினையும் மேம்படுத்தும்.
மூன்றாவது மேம்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. இதன் மூலம் கூடுதலான நீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீரை அதிகப்படுத்த அதிகம் உபயோகம் ஆகும். அது தான் நிலத்தின் சுற்று வரப்புகளுக்கு இணையாக ஒரு வாய்க்கால் அமைத்தல்
என்பது.
ஒரு மீட்டர் அகல ஆழத்திற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும். இதுவும் மண் வரப்பின் தரம் மற்றும் பயன்பாட்டினையும் மேம்படுத்தும்.
7.மழைக்கு
முன் எடுக்கவேண்டிய முன் தயாரிப்புகள்
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, முக்கியமாக நம் வயல்களுக்கு வரப்புகள் எவ்வளவு அவசியம் ? அது எப்படி மண்ணை பாதுகாக்கிறது? எப்படி ஊட்டச் சத்துக்களை பாதுகாக்கிறது? மழைநீரை எப்படி சேமிக்கிறது? எப்படி அதனை நிலத்தடி நீராக மாற்றுகிறது, என்று பார்த்தோம். நமக்குக் கிடைக்கும் மழையில் ஓடும் நீராக சேகரம் ஆவது 17.5 சதம் என்றும் பார்த்தோம்.
இதற்கு நாம் வயல் வரப்புகளை பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும், என்றும் பார்த்தோம்
வரப்புகளின் செயல்பாட்டினை மேம்படுத்த அவற்றின் மீது தீவனப்பயிர்கள், குதிரை மசால், மற்றும் வேலமசால் ஆகியவற்றை விதைக்கலாம் என்று பார்த்தோம்
மூன்றாவதாக வயல் வரப்புகளில் உள்வழி, வெளிவழி அமைக்க வேண்டும் என்று பார்த்தோம்
மண்வரப்புதானே என்று நாம் அசிரத்தையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இர்ண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நமது தமிழ்ப்பாட்டி ஔவையார் அவர்கள் “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர சோல் உயரும் “ என்று சொன்னார்.
இறுதியாக ஒரு செய்தி ஓரு நாட்டில் 1930 ம் ஆண்டுவாக்கில் நிலத்தையும் நீரையும் பாதுகாக்க ஒரு இளைஞர் ராணுவத்தை அமைத்தார்கள் தெரியுமா உங்களுக்கு ?
அந்த இளைஞர் ராணுவத்தின் பெயர் சாயில் சோல்ஜர்ஸ் (SOIL SOLDIERS) அந்த இளைஞர் ராணுவத்தின் பெயர் சாயில் சோல்ஜர். மண்ணையும் நீரையும் பாதுகாக்க இளைஞர் ராணுவத்தை அமைத்த நாடு அமெரிக்கா, அதனை அமைத்தவர் எஃப் டி ஆர் என்று அழைக்கப்படும் ஃபிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் (FRANKLIN DELANO ROOSEVELT) அவர்கள் அவர் அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
பூமி ஞானசூரியன்.
No comments:
Post a Comment